General06 September 2026

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 7 மாவட்டங்களில், 35,149 குடும்பங்களைச் சேர்ந்த 115,534பேர் எல்நினோ வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 34,608 குடும்பங்களைச் சேர்ந்த, 113,354 குடும்பங்களுக்குத் தேவையான நீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் 41,360 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 33, 394 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பதுளை மாவட்டத்தில் 20,418 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 11,995 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 5,562 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எல்நினோ நிலைமை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்படும் அபாயம் உள்ள சுமார் 5,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes