22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்துள்ள உயர்நீதிமன்றம், அது குறித்த தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், அந்தத் தீர்மானம் இன்று ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்றம் தனது இரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்திருந்தது.
இதன்படி, அந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் சபாநாயகர் அதனை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
நாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைத்தவுடன், அதனைப் நாடாளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னதாக தெரிவித்தார்.
பேருவளையில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்றம் தனது இரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்திருந்தது.
இதன்படி, அந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் சபாநாயகர் அதனை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
நாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைத்தவுடன், அதனைப் நாடாளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னதாக தெரிவித்தார்.
பேருவளையில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
வான்கடே மைதானத்தின் சிறப்பு வரவேற்பறைகளுக்கு சூட்டப்படவுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்: மும்பை கிரிக்கெட் சங்கம் தீர்மானம்!
Local
12 September 2026
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசைதிருப்பும் தற்போதைய அரசு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
அஜித் - விஜய் சந்திப்பால் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன
Local
12 September 2026
சாலமன் பாப்பையாவின் பூதவுடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை
Local
12 September 2026
கொழும்பு இசை நிகழ்ச்சி சர்ச்சை: நியோ தரப்பில் குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
Local
12 September 2026
பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் பலி! ஆலய உற்சவத்தில் நடந்த கொடூரம்
Local
12 September 2026
62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நாளை மறுதினம் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்
Local
12 September 2026
AI நிழற்படங்கள் குறித்து அதிருப்தி: கிளியான் எம்பாப்பே கவலை!
Local
12 September 2026
செங்கடல் நுழைவாயிலைக் கைப்பற்றிய ஹவுதிகள்: சவூதி எண்ணெய் குழாய்ப் பாதை தற்காலிகமாக மூடல்!
Local
12 September 2026
2030 உலகக் கிண்ண இறுதிப்போட்டி: மொரோக்கோவின் உரிமைக்கோரலுக்கு ஃபீஃபா மறுப்பு
Local
12 September 2026