22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்துள்ள உயர்நீதிமன்றம், அது குறித்த தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், அந்தத் தீர்மானம் இன்று ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்றம் தனது இரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்திருந்தது.
இதன்படி, அந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் சபாநாயகர் அதனை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
நாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைத்தவுடன், அதனைப் நாடாளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னதாக தெரிவித்தார்.
பேருவளையில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்றம் தனது இரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்திருந்தது.
இதன்படி, அந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் சபாநாயகர் அதனை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
நாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைத்தவுடன், அதனைப் நாடாளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னதாக தெரிவித்தார்.
பேருவளையில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026
குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
09 September 2026
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026
ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!
Local
09 September 2026
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் 3 புதிய பாலங்கள் திறப்பு!
Local
09 September 2026