"வாழ்க்கையில் எல்லாமே மாறலாம், ஆனால் அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது. வாழ்க்கையில் நண்பர்கள் மாறலாம், ஆனால் அயல்நாடுகள் மாறவே முடியாது" என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையை இந்தியாவின் மிக நெருங்கிய நண்பராக இந்தியா கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று இலங்கைகை வந்தடைந்தார்.
இந்தநிலையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற சமூகம் சார்ந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடியின்போதும் இந்தியா தனது முழு பலத்துடன் இலங்கைக்குத் துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.
இந்தியாவின் நீண்டகால பாரம்பரியம் தனது அயல்நாடுகளைக் குடும்ப உறுப்பினர்களாக நடத்துவதுதான் என்று கூறிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று மற்றும் நாகரிக உறவுகளை கோடிட்டுக் காட்டினார்.
கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியா உறுதுணையாக நின்றதை அவர் நினைவுகூர்ந்தhர்.
எதிர்காலத்திலும் எந்தவொரு நெருக்கடியின்போதும் இலங்கை அரசுடன் இந்தியா முழு பலத்துடன் நிற்கும் என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு வந்துள்ள ராஜ்நாத் சிங்இ தனது இந்தப் பயணத்தின் போது இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சுமார் நான்கு தசாப்தங்களில் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இந்திய அமைச்சர் இன்று இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Latest News
இலங்கையின் எல்லைக்கு அப்பால் ஈரானிய கப்பல்கள் : அமெரிக்க தூதரகம் வழங்கிய தகவல்!
Local
09 September 2026
அமெரிக்க ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட மன்னர் தொடர்பான தவறான காணொளி!
Local
09 September 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: இந்தியப் பிரஜையின் உடலம் விசேட பாதுகாப்புடன் அடக்கம்
Local
09 September 2026
அதிர்ச்சியில் நேபாளம் : வெள்ளத்தின் சோகம் மாறுவதற்குள் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதியில் மக்கள்!
Local
09 September 2026
மாத்தறை - அக்குரெஸ்ஸ வீதியில் விபத்து: ஒருவர் பலி
Local
09 September 2026
துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட 'கொண்ட ரஞ்சித்' கைது: குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அதிரடி!
Local
09 September 2026
மின்னல் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!
Local
09 September 2026
அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது - இந்திய அமைச்சர் கொழும்பில் கருத்து
Local
09 September 2026
கொழும்பில் முன்னிலைப் போதைப்பொருள் கடத்தல்காரரின் முக்கிய நண்பர்கள் 4 பேர் கைது!
Local
09 September 2026
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்
Local
09 September 2026