"வாழ்க்கையில் எல்லாமே மாறலாம், ஆனால் அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது. வாழ்க்கையில் நண்பர்கள் மாறலாம், ஆனால் அயல்நாடுகள் மாறவே முடியாது" என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையை இந்தியாவின் மிக நெருங்கிய நண்பராக இந்தியா கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று இலங்கைகை வந்தடைந்தார்.
இந்தநிலையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற சமூகம் சார்ந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடியின்போதும் இந்தியா தனது முழு பலத்துடன் இலங்கைக்குத் துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.
இந்தியாவின் நீண்டகால பாரம்பரியம் தனது அயல்நாடுகளைக் குடும்ப உறுப்பினர்களாக நடத்துவதுதான் என்று கூறிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று மற்றும் நாகரிக உறவுகளை கோடிட்டுக் காட்டினார்.
கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியா உறுதுணையாக நின்றதை அவர் நினைவுகூர்ந்தhர்.
எதிர்காலத்திலும் எந்தவொரு நெருக்கடியின்போதும் இலங்கை அரசுடன் இந்தியா முழு பலத்துடன் நிற்கும் என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு வந்துள்ள ராஜ்நாத் சிங்இ தனது இந்தப் பயணத்தின் போது இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சுமார் நான்கு தசாப்தங்களில் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இந்திய அமைச்சர் இன்று இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Latest News
மரண தண்டனை குறித்து இன்னும் தீர்மானம் இல்லை: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினருக்கு மன்னிப்பே கிடையாது - ஜனாதிபதி
Local
12 September 2026
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம் நியமனம்
Local
12 September 2026
முத்துராஜவெல வனப்பகுதியில் தீப்பரவல் : கட்டுப்படுத்த தீவிர வான்வழி நடவடிக்கை!
Local
12 September 2026
இலங்கையில் உடனடியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
Local
12 September 2026
இலங்கையை அச்சுறுத்தும் எல் நினோ: ஒக்டோபரில் கனமழை....பெப்ரவரியில் கடும் வறட்சி!
Local
12 September 2026
நெஞ்சை நெகிழ வைக்கும் லண்டன் சந்திப்பு- இரவு முழுவதும் காத்திருந்து விஜய்க்கு கடிதம் வழங்கிய ஈழத்தமிழ் பெண்
Local
12 September 2026
எதிர்வரும் நாட்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்!
Local
12 September 2026
நாளை கல்யாணம், இன்று கண்ணீர்! - மணமகனின் கண் முன்னேயே மணப்பெண் பரிதாப பலி
Local
12 September 2026
நாடாளுமன்றம் மற்றும் அரச பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை தந்தார் சீன ஜனாதிபதி!
Local
12 September 2026