"வாழ்க்கையில் எல்லாமே மாறலாம், ஆனால் அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது. வாழ்க்கையில் நண்பர்கள் மாறலாம், ஆனால் அயல்நாடுகள் மாறவே முடியாது" என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையை இந்தியாவின் மிக நெருங்கிய நண்பராக இந்தியா கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று இலங்கைகை வந்தடைந்தார்.
இந்தநிலையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற சமூகம் சார்ந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடியின்போதும் இந்தியா தனது முழு பலத்துடன் இலங்கைக்குத் துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.
இந்தியாவின் நீண்டகால பாரம்பரியம் தனது அயல்நாடுகளைக் குடும்ப உறுப்பினர்களாக நடத்துவதுதான் என்று கூறிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று மற்றும் நாகரிக உறவுகளை கோடிட்டுக் காட்டினார்.
கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியா உறுதுணையாக நின்றதை அவர் நினைவுகூர்ந்தhர்.
எதிர்காலத்திலும் எந்தவொரு நெருக்கடியின்போதும் இலங்கை அரசுடன் இந்தியா முழு பலத்துடன் நிற்கும் என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு வந்துள்ள ராஜ்நாத் சிங்இ தனது இந்தப் பயணத்தின் போது இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சுமார் நான்கு தசாப்தங்களில் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இந்திய அமைச்சர் இன்று இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Latest News
டிட்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு டிசம்பர் 31 வரை நீடிப்பு
Local
09 September 2026
2030-க்குள் மனிதகுலத்திற்கு பேராபத்தா? – AI நிறுவனத்தின் ஆய்வாளர் திடீர் ராஜினாமாவின் பின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
Local
09 September 2026
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: ஜனாதிபதி விடுத்த கோரிக்கை
Local
09 September 2026
மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்ட “கொண்ட ரஞ்சித்”!
Local
09 September 2026
மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதி!
Local
09 September 2026
விளக்கம் அளித்தும் ஓயாத சர்ச்சை: சட்டமன்ற மரபுகளை மீறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? - பதவியை கேள்விக்குள்ளாக்கிய திமுக!
Local
09 September 2026
சுகீஸ்வர பண்டார எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
Local
09 September 2026
சிறுவர்களின் உடல்ரீதியான தொடுகை: சம்மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தல்
Local
09 September 2026
"சிக்மா படத்திற்கு விஜய் சேரின் ஆதரவு மிகப்பெரிய அடையாளம்" – சிலிர்க்க வைக்கும் சந்தீப் கிஷன் பேச்சு!
Local
09 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் எதிரொலி - கொழும்பு வந்தடைந்தது 'ஐ.என்.எஸ் உதயகிரி' போர்க்கப்பல்
Local
09 September 2026