இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ராஜ்நாத் சிங்குடன் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு மற்றும் இராணுவ கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
செப்டம்பர் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ராஜ்நாத் சிங், தனது விஜயத்தின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அமுலாக்கத்தை மதிப்பாய்வு செய்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். இதனையொட்டி, கொழும்பு போக்குவரத்துப் பிரிவு, சிறப்புப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ராஜ்நாத் சிங்குடன் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு மற்றும் இராணுவ கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
செப்டம்பர் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ராஜ்நாத் சிங், தனது விஜயத்தின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அமுலாக்கத்தை மதிப்பாய்வு செய்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். இதனையொட்டி, கொழும்பு போக்குவரத்துப் பிரிவு, சிறப்புப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
Latest News
நாடலி ஹார்ப் உள்ளிட்ட நெருக்கமான உதவியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்
Local
10 September 2026
மத்திய கிழக்கில் தற்போது என்ன நடக்கிறது? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
10 September 2026
களுபோவில வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு!
Local
10 September 2026
பிலிப்பைன்ஸில் கப்பலில் தீப்பரவல்: 5 பேர் உயிரிழப்பு!
Local
10 September 2026
அணுவாயுதம் வைத்திருப்பவர்களும் ஈரானின் நாகரிகத்தை அச்சுறுத்துவோரும் நியாயம் பேச தகுதி அற்றவர்கள் - ஈரான் துணை ஜனாதிபதி கண்டனம்
Local
10 September 2026
நவம்பர் தேர்தலுக்கு பிறகு ஈரானுக்கு எதிரான போர் உடன் முடிவுறும்: மசகு எண்ணெய் விலையும் குறையும் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
10 September 2026
பெரு நாட்டில் 600 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு: 38 பேரின் எச்சங்கள் மீட்பு!‘
Local
10 September 2026
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ஆயுதக் கிடங்கு வெடிப்பு: 14 பேர் பலி
Local
10 September 2026
பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சாத்தியம் குறித்து ஆராய்ப்படுகிறது - பிரதமர்
Local
10 September 2026
கெமரூனில் ஆயுததாரிகள் தாக்குதல்: காவல்துறை அதிகாரி பலி, ஆசிரியர்கள் கடத்தல்!
Local
10 September 2026