இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ராஜ்நாத் சிங்குடன் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு மற்றும் இராணுவ கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
செப்டம்பர் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ராஜ்நாத் சிங், தனது விஜயத்தின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அமுலாக்கத்தை மதிப்பாய்வு செய்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். இதனையொட்டி, கொழும்பு போக்குவரத்துப் பிரிவு, சிறப்புப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ராஜ்நாத் சிங்குடன் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு மற்றும் இராணுவ கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
செப்டம்பர் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ராஜ்நாத் சிங், தனது விஜயத்தின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அமுலாக்கத்தை மதிப்பாய்வு செய்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். இதனையொட்டி, கொழும்பு போக்குவரத்துப் பிரிவு, சிறப்புப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
Latest News
லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
Local
11 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் : 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி!
Local
11 September 2026
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026