நோர்வூட் பிரதேச செயலகத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, அங்குள்ள பிரிவு பொறுப்பாளர்களான இரண்டு பெண் சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இருவரும் நேற்று (08) ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் மேலும் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட தொகை 2 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதனிடையே, நிதி அமைச்சு மற்றும் நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் 6 ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில், குறித்த 6 ஆசிரியர்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், பிரதான சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரின் வங்கிக் கணக்கிலும் பெருமளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவி வகித்த குறித்த சந்தேகநபரின் பணியையும் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Latest News
சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் பரபரப்பு: விபத்தில் சிக்கிய அஜித்குமாரின் சிற்றூந்து!
Local
12 September 2026
"திருட வேண்டாம் என்று அன்றே தந்தை சொல்லியிருக்க வேண்டும்" - ஜனாதிபதி அநுர!
Local
12 September 2026
"இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன்” சிறையிலிருந்து நாமல் செய்தி!
Local
12 September 2026
கம்பஹாவில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
Local
12 September 2026
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்!
Local
12 September 2026
தெஹிவளை கைக்குண்டு வீச்சில் இரு சிறுவர்கள் பலியானமை தொடர்பில் ஐ.நா கவலை!
Local
12 September 2026
லண்டனில் அஜித் - விஜய் நெகிழ்ச்சி சந்திப்பு: ஆரத்தழுவி வாழ்த்து!
Local
12 September 2026
“ஈழம் கேட்க மாட்டேன் - 2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி" - மொட்டு மேடையில் அர்ச்சுனா பேச்சு!
Local
12 September 2026
மரண தண்டனை குறித்து இன்னும் தீர்மானம் இல்லை: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினருக்கு மன்னிப்பே கிடையாது - ஜனாதிபதி
Local
12 September 2026
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம் நியமனம்
Local
12 September 2026