General09 September 2026

காலாவதியான தேயிலைத் தூள் விற்பனை: நிறுவனத்துக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்!

காலாவதியான தேயிலைத் தூள் பொதிகளை நுகர்வோருக்கு விற்பனை செய்தமைக்காக நிறுவனமொன்றுக்கு நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கடந்த ஜூலை 15 ஆம் திகதியன்று காலாவதியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த 400 கிராம் தேயிலைத்தூள் பொதியொன்று 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

இதனிடையே, 2014 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் திகதியிடப்பட்ட 1875/38 இலக்கக் விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 52 ஆம் இலக்க வழிகாட்டல்களுக்கு இணங்க, விற்பனைக்குத் தகுதியற்ற அல்லது காலாவதியான பொருட்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes