பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்த பெண்ணொருவரின் உடலம், உயிரிழந்து சில நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக மொரகஹேன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போதே அவரது உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குடா உடுவ, கரகஹதெனிய பகுதியில் வசித்து வந்த 51 வயதான நிர்மலா பிரசாதி ஏகநாயக்க என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, மருதானை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய பின்னர், அவர் பக்கவாதம் போன்ற நோய் நிலைக்கு ஆளாகியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
எனினும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே மத வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் தனது கணவருடன் வசிக்கவில்லை என்றும், மற்றொரு நபருடன் வசித்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த இருவரும் மத வழிபாடுகளை மேற்கொண்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் உடலத்தை மீட்டபோது, அவர் உயிரிழந்து குறைந்தது இரண்டு நாட்களாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், பிரேதப் பரிசோதனைக்காக உடலம் ஹோமாகம மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹேன காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
தெஹிவளை கைக்குண்டு வீச்சில் இரு சிறுவர்கள் பலியானமை தொடர்பில் ஐ.நா கவலை!
Local
12 September 2026
லண்டனில் அஜித் - விஜய் நெகிழ்ச்சி சந்திப்பு: ஆரத்தழுவி வாழ்த்து!
Local
12 September 2026
“ஈழம் கேட்க மாட்டேன் - 2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி" - மொட்டு மேடையில் அர்ச்சுனா பேச்சு!
Local
12 September 2026
மரண தண்டனை குறித்து இன்னும் தீர்மானம் இல்லை: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினருக்கு மன்னிப்பே கிடையாது - ஜனாதிபதி
Local
12 September 2026
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம் நியமனம்
Local
12 September 2026
முத்துராஜவெல வனப்பகுதியில் தீப்பரவல் : கட்டுப்படுத்த தீவிர வான்வழி நடவடிக்கை!
Local
12 September 2026
இலங்கையில் உடனடியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
Local
12 September 2026
இலங்கையை அச்சுறுத்தும் எல் நினோ: ஒக்டோபரில் கனமழை....பெப்ரவரியில் கடும் வறட்சி!
Local
12 September 2026
நெஞ்சை நெகிழ வைக்கும் லண்டன் சந்திப்பு- இரவு முழுவதும் காத்திருந்து விஜய்க்கு கடிதம் வழங்கிய ஈழத்தமிழ் பெண்
Local
12 September 2026
எதிர்வரும் நாட்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்!
Local
12 September 2026