Entertainment08 August 2026

"எந்த நிமிடத்தில் தொடங்கினாலும் ரஜினி பணம் தருவார்!" - லதா ரஜினிகாந்த் அதிரடி!

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியுமான லதா ரஜினிகாந்த் நேற்று 'மக்கள் மேடை' என்ற அமைப்பைத் தொடங்கினார்.

சமூக நலத் திட்டங்களுக்காகப் பொதுமக்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த மக்களுக்கான இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த அமைப்பு, கழிவு மேலாண்மை, நீர்நிலைகளைச் சீரமைத்தல், கல்வி மற்றும் கிராமப்புற விவசாயப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டைகளை வெளியிட்ட லதா ரஜினிகாந்த், வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் 50 இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துத் தூய்மைப்படுத்தும் பெருந்திரள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவித்தார்.

மேலும் காவிரி-நதிகள் இணைப்புத் திட்டத்தை எந்த நிமிடத்தில் தொடங்கினாலும், ரஜினிகாந்த் கூறியது போல நிதி வழங்குவார் என்றும், மக்கள் மேடை இயக்கத்திற்கு ரஜினியின் 100% ஆசி உள்ளதாகவும், மக்களின் குறைகளை அரசிடம் கொண்டு செல்வோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes