நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடித்துள்ளமை குறித்து நடிகை மமிதா பைஜு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மலையாளத்தில் வெளியான "பிரேமலு" திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மமிதா பைஜு, தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.
நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த "ஜனநாயகன்" திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில், அடுத்ததாக நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.
தற்போது இந்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இதன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று அண்மையில் கொச்சியில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகை மமிதா பைஜு,
கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் சூர்யா கொச்சிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்.
அப்போது நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது அவரை நேரில் சந்தித்துவிட வேண்டும் என விரும்பினேன். இருப்பினும், சிறுவயது மாணவி என்பதாலும் கோட்டயத்தில் இருந்து கொச்சிக்கு பயணம் செய்வது சிரமம் என்பதாலும் எனது பெற்றோர் அதற்கு அனுமதிக்கவில்லை.
ஆனால், எனது சகோதரர் கொச்சி சென்று அந்நிகழ்வில் பங்கேற்றதுடன், நடிகர் சூர்யாவுடன் நிழற்படமும் எடுத்துக்கொண்டார். அந்தப் நிழற்படத்தைப் பார்த்தபோது எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது.
ஆனால், காலம் இன்று எவ்வளவு மாறிவிட்டது! அன்று நேரில் பார்ப்பதற்குக்கூட அனுமதி கிடைக்காத நிலை மாறி, இன்று அவரது திரைப்படத்திலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளமை கடவுளின் ஆசீர்வாதமே எனத் தெரிவித்தார்.
மலையாளத்தில் வெளியான "பிரேமலு" திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மமிதா பைஜு, தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.
நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த "ஜனநாயகன்" திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில், அடுத்ததாக நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.
தற்போது இந்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இதன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று அண்மையில் கொச்சியில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகை மமிதா பைஜு,
கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் சூர்யா கொச்சிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்.
அப்போது நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது அவரை நேரில் சந்தித்துவிட வேண்டும் என விரும்பினேன். இருப்பினும், சிறுவயது மாணவி என்பதாலும் கோட்டயத்தில் இருந்து கொச்சிக்கு பயணம் செய்வது சிரமம் என்பதாலும் எனது பெற்றோர் அதற்கு அனுமதிக்கவில்லை.
ஆனால், எனது சகோதரர் கொச்சி சென்று அந்நிகழ்வில் பங்கேற்றதுடன், நடிகர் சூர்யாவுடன் நிழற்படமும் எடுத்துக்கொண்டார். அந்தப் நிழற்படத்தைப் பார்த்தபோது எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது.
ஆனால், காலம் இன்று எவ்வளவு மாறிவிட்டது! அன்று நேரில் பார்ப்பதற்குக்கூட அனுமதி கிடைக்காத நிலை மாறி, இன்று அவரது திரைப்படத்திலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளமை கடவுளின் ஆசீர்வாதமே எனத் தெரிவித்தார்.
Latest News
சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
12 August 2026
மத்திய தரைக்கடலில் வேகமாகப் பரவும் அந்நிய கடல்வாழ் உயிரினங்கள்: மாறிவரும் கடல் சூழலால் விஞ்ஞானிகள் கவலை
Local
12 August 2026
இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை விண்கல் மழை
Local
12 August 2026
ஒருவழியாகத் திருமணம் முடிந்தது – ஜோர்ஜினா ரோட்ரிகஸை மணந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
Local
12 August 2026
குகைக்குள்தான் வாழ வேண்டும்: ஜான்வி கபூர் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
Local
12 August 2026
"இந்த வயதில் Drama சங்கடமாக இருக்கிறது" : நடிகை த்ரிஷாவின் பதிவு - இரசிகர்கள் மத்தியில் எழுந்த கேள்வி!
Local
12 August 2026
சுகீஸ்வர பண்டார நீதிமன்றில் முன்னிலை
Local
12 August 2026
வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
Local
12 August 2026
தங்காலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு - எவருக்கும் காயமில்லை
Local
12 August 2026
யோஷித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை
Local
12 August 2026