Entertainment20 August 2026

மெட்ரோ தொடருந்தில் பாம்புகள் – சீனாவில் பரபரப்பு

சீனாவின் நான்ஜிங் நகரில் பயணித்துக் கொண்டிருந்த மெட்ரோ தொடருந்தில், பயணி ஒருவர் கொண்டு வந்த வாளி கவிழ்ந்ததில் உயிருள்ள பாம்புகள் தொடருந்துக்குள் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாளியில் இருந்து வெளியேறிய பாம்புகள் தொடருந்துப் பெட்டி முழுவதும் ஊர்ந்து சென்ற போதிலும், பயணிகள் பதற்றமடையாமல் அமைதியாக இருந்துள்ளனர்.

சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்குள், சக பயணிகள் இணைந்து பாம்புகளை கைகளால் பிடித்து மீண்டும் வாளிக்குள் போட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பயணிகளின் நிதானமான செயல் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதேவேளை, பொதுப் போக்குவரத்தில் உயிருள்ள பாம்புகள் உள்ளிட்ட ஊர்வனவற்றை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes