திரைத்துறையிலிருந்து விலகி தற்போது ரிஷிகேஷில் வசித்து வரும் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், பெயரைக் குறிப்பிடாமல் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது மீண்டும் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
‘காற்றின் மொழி’, ‘பேச்சுலர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் ஸ்வாகதா கிருஷ்ணன்.
தற்போது சினிமாவிலிருந்து விலகியுள்ள அவர், ரிஷிகேஷில் தொழில் முனைவோராக செயல்பட்டு வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில், இசையமைப்பாளர் ஒருவர் தமக்கு அத்துமீறல் தொடர்பான துன்புறுத்தலை மேற்கொண்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
எனினும், அந்த நேரத்தில் குறித்த இசையமைப்பாளரின் பெயரை அவர் வெளியிடவில்லை.
அந்த சம்பவத்துக்குப் பின்னரே சென்னையில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக திரைத்துறையிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த இசையமைப்பாளரை மீண்டும் குறிப்பிடும் வகையில் ஸ்வாகதா பரபரப்பான கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
பல பெண்களுக்கு அத்துமீறல் மேற்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், அவர்களின் கண்ணியத்தையும் பணத்தையும் பறித்து, மிரட்டல் மற்றும் பிளாக்மெயில் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது சமூக வலைத்தளங்கள், சமூகத்தின் மனநிலை மற்றும் பி.ஆர். நடைமுறைகள் குறித்து நேர்காணல்களில் பேசி வரும் அந்த இசையமைப்பாளர், ஆன்மிக திரைப்படம் ஒன்றுக்கு இசையமைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அந்த இசையமைப்பாளரை மேடைக்கு அழைத்து இரண்டு பெண்கள் கேக் ஊட்டி வரவேற்ற சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ள ஸ்வாகதா, இதுபோன்ற செயல்களுக்கு சினிமாத்துறையே ஆதரவளிப்பதாக விமர்சித்துள்ளார்.
எனினும், தனது பதிவில் அவர் குற்றம்சாட்டும் இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிடவில்லை.
இதையடுத்து, ஸ்வாகதா குறிப்பிடுவது யார் அந்த இசையமைப்பாளர்? என ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஸ்வாகதாவின் இந்த புதிய பதிவு தற்போது திரையுலகிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
Latest News
நாட்டை விட்டு வெளியேற முயற்சியா? - சிரந்தி ராஜபக்ஷ விவகாரத்தில் வெளியான உண்மைப் பின்னணி!
Local
16 September 2026
ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து வானூர்தி நிறுவனத்திடம் விசாரணை
Local
16 September 2026
எயார்பஸ் நிதி முறைகேடு - நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை!
Local
16 September 2026
இலங்கை - தாய்லாந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம் : விசா விலக்கு தொடர்பிலும் கவனம்!
Local
16 September 2026
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சுகாதார அபாயம்: பாகிஸ்தான் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை
Local
16 September 2026
இந்திய மதிப்பில் ரூ.100 கோடி மோசடி வழக்கு: தமிழக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை
Local
16 September 2026
20 வருட காதல் பயணம் : மீண்டும் ஒருமுறை திருமண பந்தத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா!
Local
16 September 2026
நாட்டில் கடந்த ஆண்டில் வேலையின்மை விகிதம் 3.9 வீதமாகப் பதிவு
Local
16 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Local
16 September 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபருக்கு ஒத்திவைப்பு!
Local
16 September 2026