திரைத்துறையிலிருந்து விலகி தற்போது ரிஷிகேஷில் வசித்து வரும் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், பெயரைக் குறிப்பிடாமல் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது மீண்டும் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
‘காற்றின் மொழி’, ‘பேச்சுலர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் ஸ்வாகதா கிருஷ்ணன்.
தற்போது சினிமாவிலிருந்து விலகியுள்ள அவர், ரிஷிகேஷில் தொழில் முனைவோராக செயல்பட்டு வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில், இசையமைப்பாளர் ஒருவர் தமக்கு அத்துமீறல் தொடர்பான துன்புறுத்தலை மேற்கொண்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
எனினும், அந்த நேரத்தில் குறித்த இசையமைப்பாளரின் பெயரை அவர் வெளியிடவில்லை.
அந்த சம்பவத்துக்குப் பின்னரே சென்னையில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக திரைத்துறையிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த இசையமைப்பாளரை மீண்டும் குறிப்பிடும் வகையில் ஸ்வாகதா பரபரப்பான கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
பல பெண்களுக்கு அத்துமீறல் மேற்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், அவர்களின் கண்ணியத்தையும் பணத்தையும் பறித்து, மிரட்டல் மற்றும் பிளாக்மெயில் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது சமூக வலைத்தளங்கள், சமூகத்தின் மனநிலை மற்றும் பி.ஆர். நடைமுறைகள் குறித்து நேர்காணல்களில் பேசி வரும் அந்த இசையமைப்பாளர், ஆன்மிக திரைப்படம் ஒன்றுக்கு இசையமைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அந்த இசையமைப்பாளரை மேடைக்கு அழைத்து இரண்டு பெண்கள் கேக் ஊட்டி வரவேற்ற சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ள ஸ்வாகதா, இதுபோன்ற செயல்களுக்கு சினிமாத்துறையே ஆதரவளிப்பதாக விமர்சித்துள்ளார்.
எனினும், தனது பதிவில் அவர் குற்றம்சாட்டும் இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிடவில்லை.
இதையடுத்து, ஸ்வாகதா குறிப்பிடுவது யார் அந்த இசையமைப்பாளர்? என ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஸ்வாகதாவின் இந்த புதிய பதிவு தற்போது திரையுலகிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
Latest News
பொருளாதார நெருக்கடியால் வெடித்த ஆத்திரம்: கடலை நோக்கிச் சத்தமிட்ட விசித்திரக் கூட்டம்!
Local
15 September 2026
2027ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!
Local
15 September 2026
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபரும், தப்பிச் செல்ல உதவிய சாரதியும் கைது
Local
15 September 2026
சிறுபோக நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக ரூ. 2.5 பில்லியன் நிதி ஒதுக்கீடு: அமைச்சரவை அனுமதி
Local
15 September 2026
தங்கம் வாங்குவோருக்கு நற்செய்தி : சட்டென சரிந்த விலை!
Local
15 September 2026
21 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை
Local
15 September 2026
அர்ச்சுனாவை மாற்றிய பெருமை நாமல் ராஜபக்ஷவையே சாரும் - இந்திக்க அனுருத்த
Local
15 September 2026
மின் மற்றும் இலத்திரனியல் சாதனங்களுக்கு 6 மாத உத்தரவாதம் கட்டாயம்!
Local
15 September 2026
சிறுவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் அதிகாரிகளா நீங்கள்? பதவிகளுக்கு வருகிறது கடுமையான கட்டுப்பாடு!
Local
15 September 2026
தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவில் இடம்பெற்றது
Local
15 September 2026