Sports29 July 2026

தண்ணீர் கொடுப்பது அவமானமல்ல, அது ஒரு கற்றல் அனுபவம் - சூர்யவன்ஷி விவகாரத்தில் அஸ்வின் அதிரடி

15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்குத் தான் தெரிவித்த கருத்து குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் அமர்ந்து கொண்டு மற்றவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது போன்ற தனது கருத்து அவமானப்படுத்தும் நோக்கில் கூறப்பட்டவை அல்ல என்றும், அது அவருக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும் என்றே கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடரில் ஜொஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் அவர் தடுமாறினாலும், ஸிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடியதை அஸ்வின் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் குறுகிய காலத்திற்குள் ஒரு வீரரை விமர்சித்து ஒதுக்கிவிடக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக ஆடியதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளதாகவும், விராட் கோலி அல்லது ரோகித் சர்மா போன்று ஒவ்வொரு போட்டியிலும் நிலைத்து நின்று விளையாடுவார் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்த அஸ்வின், கிரிக்கெட்டில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது இயற்கை என்றும் கூறியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes