பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் விஷ்ணு பிரசாத் பவுடல் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய அரசாங்கங்களின் ஊழல்களுக்கு எதிராக, தற்போதைய பிரதமர் பலேந்திர ஷா தலைமையிலான இளைய தலைமுறையினரின் ஆதரவுடனான அரசாங்கம் முன்னெடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இக்கைது இடம்பெற்றுள்ளது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தில் முக்கிய புள்ளியுமான 66 வயதுடைய பவுடல், மேற்கு நேபாளத்தில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டங்களை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கம் கவிழ்ந்தது.
இதன்போது ஏற்பட்ட வன்முறைகளைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் ஒலியும் அவரது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ஊழலை ஒழிப்பதாக உறுதியளித்து ஆட்சியைப் பொறுப்பேற்ற 36 வயதுடைய ராப் பாடகரான தற்போதைய பிரதமர் பலேந்திர ஷா, கடந்த கால ஊழல்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கைது குறித்து விஷ்ணு பிரசாத் பவுடலிடமிருந்து எவ்வித கருத்தும் வெளிவராத நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கலந்துரையாட, கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கூடவுள்ளனர்.
Latest News
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: பிரான்சில் நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு
Local
23 June 2026
தேசிய மீலாத் விழா அழைப்பிதழ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை கேள்வி – குறைபாடுகளை நிவர்த்திக்க அரசாங்கம் உறுதி!
Local
23 June 2026
ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விசேட தேசிய திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!
Local
23 June 2026
பதுளை நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை
Local
23 June 2026
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்: விசேட குழு மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையில் விசேட அலகு நியமனம்!
Local
23 June 2026
MV Hondius சொகுசு கப்பல் ஹன்டா வைரஸ் பாதிப்பிலிருந்து 18 அமெரிக்கர்கள் விடுவிப்பு!
Local
23 June 2026
‘எல் நினோ’ காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு நியமனம்: ஜனாதிபதியின் யோசனைக்கு ஒப்புதல்!
Local
23 June 2026
2027 முதல் பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்க்க புதிய சுற்றுநிருபம்: அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்!
Local
23 June 2026
தேர்தல்களில் ‘அழியாத மை’ பாவனை நீக்கப்படவுள்ளது: ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Local
23 June 2026
சுரேஷ் சலேயின் தாயார் திருத்தந்தைக்கு கடிதம்
Local
23 June 2026