காற்பந்து கிண்ணத் தொடரின் 32 அணிகளுக்கான சுற்றில் மெக்சிகோ அணி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, மெக்சிகோ சிட்டியில் (Mexico City) கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 வயது யுவதி உட்பட மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈக்வடோர் அணிக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தலைநகரில் பெருமளவிலான மக்கள் வீதிகளில் திரண்டபோதே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
உயிரிழந்த ஏனைய இருவர் 48 வயதுடைய பெண் மற்றும் 44 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தலைநகரின் சுகாதாரப் பிரிவு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
1986 ஆம் ஆண்டிற்குப் பிறகு மெக்சிகோ அணி உலகக் கிண்ண நொக்-அவுட் (Knockout) சுற்றொன்றில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து, மெக்சிகோ நகரின் மையப்பகுதியிலுள்ள புகழ்பெற்ற 'ஏஞ்சல் ஒஃப் இண்டிபென்டன்ஸ்' நினைவுச் சின்னத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாத்திரம் பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
கொண்டாட்டங்களின் போது மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மூவருக்கும் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈக்வடோர் அணிக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தலைநகரில் பெருமளவிலான மக்கள் வீதிகளில் திரண்டபோதே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
உயிரிழந்த ஏனைய இருவர் 48 வயதுடைய பெண் மற்றும் 44 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தலைநகரின் சுகாதாரப் பிரிவு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
1986 ஆம் ஆண்டிற்குப் பிறகு மெக்சிகோ அணி உலகக் கிண்ண நொக்-அவுட் (Knockout) சுற்றொன்றில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து, மெக்சிகோ நகரின் மையப்பகுதியிலுள்ள புகழ்பெற்ற 'ஏஞ்சல் ஒஃப் இண்டிபென்டன்ஸ்' நினைவுச் சின்னத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாத்திரம் பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
கொண்டாட்டங்களின் போது மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மூவருக்கும் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Latest News
போர்க்களத்தில் 14 பேரின் உயிரைக் காத்த இலங்கை வான்படையின் துணிச்சலுக்கு பாராட்டு!
Local
02 July 2026
நெஞ்சை பதறவைத்த கூடுதல் நேரம்: செனகலை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி!
Local
02 July 2026
மெக்சிகோவில் கால்பந்து வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி மூவர் மூச்சுத்திணறி பலி!
Local
02 July 2026
காவல்துறை உத்தியோகத்தருக்கு 2 மணிநேர சிறை!
Local
02 July 2026
யாழ். மாநகர சபை புதிய கட்டடப் பணிகளுக்காக சுமார் ரூ. 1,958 மில்லியன் - அமைச்சரவை அனுமதி!
Local
02 July 2026
இலங்கை ஏதிலியின் பாக்கு நீரிணை நீச்சல் பயணம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
02 July 2026
பாகிஸ்தான், கட்டார் அதிகாரிகளுடனான அமெரிக்க ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாக ஈரான் கூறுகிறது
Local
02 July 2026
அமேசான் ஊழியர் ட்ரம்ப் உருவ பொம்மையின் தொப்பியை அகற்றியதாக சர்ச்சை
Local
02 July 2026
இலங்கையில் இன்னும் டெங்கு பரவுகிறது - 24 மணிநேரத்தில் 1217 நோயாளர்கள்!
Local
02 July 2026
வவுனியா முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
Local
02 July 2026