கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேவண்டன் தோட்டத்தின் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
பதாதைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி வேவண்டன் தோட்டத்திலிருந்து கண்டி நுவரெலியா பிரதான பாதைக்கு சென்று கெரண்டி எல்ல பிரதேசத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
சுமார் 48 குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இந்த பெருந்தோட்டத்தில் வசித்து வருகின்றனர்.
கடந்த டிட்வா காலத்தில் இந்த தோட்டத்துக்கு செல்லும் பிரதான பாதை முழுமையாக சேதம் அடைந்தது.
இதனால் இந்த தோட்டத்தில் உள்ள பாடசாலையும் தற்போது இயங்காமல் உள்ளது.
டிட்வா காலத்தில் அருகில் உள்ள பாடசாலைகளில் தங்கி வந்த நிலையில் மீண்டும் தனது சொந்த இடமான வேவண்டன் தோட்டத்துக்கே சென்று வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருவதாக தெரிவித்த கொத்மலை பிரதேச செயலகம் கடந்த 9 மாதங்கள் கடந்தும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தற்போது தோட்டத்துக்கான ஒரு கிலோ மீற்றர் கொண்ட பாதையை புணரமைத்து தரும்படி இந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Latest News
அத்துருகிரியவில் பேருந்து ஒன்று டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்து: 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
Local
17 July 2026
ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல் ராஜதந்திர மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
Local
17 July 2026
யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: தெருக்களில் இறங்கி போராடும் மக்கள்
Local
17 July 2026
வேவண்டன் மக்களுக்கு எப்போது விடிவு? ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்
Local
17 July 2026
அரசியலுக்குள் கலந்துவிட்ட பிரேசிலின் கால்பந்து ஜேர்சி
Local
17 July 2026
ஈரானின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள்: குற்ற நோக்கம் கொண்டவை
Local
17 July 2026
ஜோ ரூட் அபாரம் - இங்கிலாந்து அணி வெற்றி
Local
17 July 2026
கடுவல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
Local
17 July 2026
30-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் 'ஜனநாயகன்': பிரம்மாண்ட வெளியீட்டிற்குத் தயாராகும் படக்குழு
Local
16 July 2026
விரைவில் திரைக்கு வருகிறது சூர்யா 47
Local
16 July 2026