உலகளவில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் செயலி, பயனர்களின் உரையாடல்களைக் கண்காணிப்பதாக எக்ஸ் தள உரிமையாளர் ஈலோன் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டை வட்ஸ்அப் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சமீபத்தில், வட்ஸ்அப் நிறுவனத்தின் முன்னாள் ஒப்பந்ததாரர்கள், அந்நிறுவன ஊழியர்கள் பயனர்களின் உரையாடல்களைப் படிக்க முடியும் என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டை மேற்கோள் காட்டிய ஈலோன் மஸ்க்,
"வட்ஸ்அப் அரட்டைகள் உண்மையிலேயே தனிப்பட்டவையா என்று அமெரிக்க அதிகாரிகள் இப்போது விசாரித்து வருகின்றனர். வட்ஸ்அப்-க்கு பதிலாக எக்ஸ் சாட்-ஐ பயனர்கள் பயன்படுத்தலாம்" என்று கூறி, தனது எக்ஸ் சாட் சேவையைப் பிரபலப்படுத்தும் நோக்கில் வட்ஸ்அப் மீது தாக்குதல் நடத்தினார்.
ஈலோன் மஸ்க்கின் இந்தக் குற்றச்சாட்டுக்கு வட்ஸ்அப் நிறுவனம் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.
வட்ஸ்அப் வெளியிட்ட அறிக்கையில்,
"எக்ஸ் சாட் எதிர்காலத்தில் பாதுகாப்பான உடனடி தகவல் பரிமாற்றத்துக்கான பயன்பாடாக மாறும் என்று தோன்றுகின்றது. இருப்பினும், தங்கள் தயாரிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, எலானும் அவரது குழுவினரும் வட்ஸ்அப் மீது தாக்குதல் நடத்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இவர்களின் பொய்க் குற்றச்சாட்டுகளால், செட்ஜிபிடி, விக்கிப்பீடியா, கூகுள் தேடல், ஆப்பிள் ஆகியவற்றையும் பாதிக்கின்றது. அவர்கள் பயனர்களை எக்ஸ் சாட் மற்றும் க்ரோக்கிற்கு மாற்ற முயற்சிக்கிறார்கள்.
பயனர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் எந்தப் பயன்பாட்டையும் பயன்படுத்த சுதந்திரம் இருப்பதாக நம்புகிறேன்.
வட்ஸ்அப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வதால், வட்ஸ்அப்பை பயன்படுத்துங்கள் என்று நான் சொல்ல முற்படவில்லை. நீங்கள் விரும்பும் எதனை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
ஆனால், இந்த மாதிரியான பொய்க் குற்றச்சாட்டுகளை உங்களைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
இந்தோனேசியாவில் பரபரப்பு: திருமணத்திற்கு புறம்பான உறவு மற்றும் மதுபாவனைக்காக 140 கசையடிகள்
Local
30 January 2026
கடனட்டை முடக்கம் மற்றும் போலி அழைப்புகள்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
30 January 2026
இலங்கை காவல்துறையில் 32,000 வெற்றிடங்கள்: விரைவில் 10,000 பேர் ஆட்சேர்ப்பு
Local
30 January 2026
மோல்டோவா வேலைவாய்ப்பு மோசடி: பொதுமக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவசர எச்சரிக்கை
Local
30 January 2026
டிட்வா சூறாவளி நிவாரணம்: நஷ்டஈடு வழங்கும் பணிகள் இறுதி கட்டத்தில்
Local
30 January 2026
60 வீதமான போக்குவரத்து ஓட்டுநர்கள் போதைப்பொருளுக்கு அடிமை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை
Local
30 January 2026
நவீன தொழில்நுட்பத்துடன் கல்வித்துறையில் பாரிய மாற்றம் - பிரதமர் அறிவிப்பு
Local
30 January 2026
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு - ஈலோன் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு தடை வருமா?
Local
30 January 2026
பிரதீப் ரங்கநாதனின் 'LIK' ரிலீஸ் எப்போது? : நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியான தகவல்
Local
30 January 2026
தனது அரசாங்கத்தையே நீதிமன்றிற்கு இழுத்த ட்ரம்ப் : உலகையே வியக்க வைத்த அமெரிக்க ஜனாதிபதியின் முடிவு
Local
30 January 2026