கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் மருத்துவர்கள் குளிப்பதை இரகசியமாகப் படம்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழில்சார் மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக குறித்த உணவகத்தில் தங்கியிருந்த பெண் மருத்துவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி, குளியலறையின் இடைவெளிகள் ஊடாக மருத்துவர்களை இரகசியமாகப் படம்பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் போது, குறித்த வீரர்கள் அதே விடுதியில் இருந்த ஆண்களையும் இவ்வாறே இரகசியமாகப் படம்பிடித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க..
மின்சாரக் கட்டண உயர்வு: நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? வெளியான முக்கிய தகவல்
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட காணொளிகள் இணையத்திலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பதிவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு வீரர்களும் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களைப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை கிரிக்கெட் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான இச்சம்பவம் விளையாட்டுத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பார்க்க..
Latest News
நாய் ரோபோக்களாக உருமாறிய தொழில்நுட்பக் கோடீஸ்வரர்கள் - பேர்லினில் வினோதக் காட்சி!
Local
30 April 2026
இன்று தங்கத்தின் விலை குறைந்தது : நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Local
30 April 2026
வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
Local
30 April 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்
Local
30 April 2026
ஆடம்பர வாழ்க்கைக்காக மகனுக்குப் புற்றுநோய் என நாடகம் : தாய்க்கு கிடைத்த தண்டனை!
Local
30 April 2026
பிக்மி, ஊபர் ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகை?
Local
30 April 2026
இலங்கையின் நகர்ப்புற மக்களில் 30 வீதமானோருக்கு 'கொழுப்பு கல்லீரல்' பாதிப்பு : மருத்துவர்கள் எச்சரிக்கை!
Local
30 April 2026
குமார் சங்கக்காரவின் கவனத்தை ஈர்த்த அந்த வீரர் - பஞ்சாப்பை பதறவைத்த ராஜஸ்தான்!
Local
30 April 2026
மீண்டும் எகிறும் எண்ணெய் விலை: உலக சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
Local
30 April 2026
தொலைத்தொடர்பு சேவைகளின் தரத்தை மேம்படுத்த புதிய சுயாதீன ஒழுங்குமுறை கட்டமைப்பு
Local
30 April 2026