நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு காவல்துறை குழுக்களும் இரண்டு பிரதம காவல் ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் களமிறக்கப்பட்டுள்ளன.
ரங்க ராஜபக்சவின் உடலம் நேற்று (30) பிற்பகல் குளியாப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுத் தோட்டத்தின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் நேற்று (30) முற்பகல் 10.00 மணியளவில் வீட்டின் பின்புறத்திற்குச் சென்றதாகவும், பிற்பகல் 2.00 மணியளவில் அவரது உடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ரங்க ராஜபக்சவிடம் மூன்று முறை வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.
அவர் பணியில் இருந்தபோது ஒரு முறையும், இடைநிறுத்தப்பட்டிருந்தபோது இரண்டு முறையும் வாக்குமூலங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வெளிநாடு செல்லத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (01) குளியாப்பிட்டி மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
குறித்த இரண்டு காவல்துறை குழுக்களும் இரண்டு பிரதம காவல் ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் களமிறக்கப்பட்டுள்ளன.
ரங்க ராஜபக்சவின் உடலம் நேற்று (30) பிற்பகல் குளியாப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுத் தோட்டத்தின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் நேற்று (30) முற்பகல் 10.00 மணியளவில் வீட்டின் பின்புறத்திற்குச் சென்றதாகவும், பிற்பகல் 2.00 மணியளவில் அவரது உடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ரங்க ராஜபக்சவிடம் மூன்று முறை வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.
அவர் பணியில் இருந்தபோது ஒரு முறையும், இடைநிறுத்தப்பட்டிருந்தபோது இரண்டு முறையும் வாக்குமூலங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வெளிநாடு செல்லத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (01) குளியாப்பிட்டி மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
Latest News
புகைப்படம் எடுப்பதில் மோதல்: திருமண வரவேற்பு விழாவில் மணமகன் - மணமகள் வீட்டார் கைகலப்பு!
Local
01 May 2026
உரத் தட்டுப்பாட்டினால் வாரத்திற்கு 10 பில்லியன் வேளைக்கான உணவுகள் இழக்கப்படும் அபாயம்
Local
01 May 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை - ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்
Local
01 May 2026
அப்பிள் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு: சீனாவில் ஐபோன் விற்பனை சாதனை!
Local
01 May 2026
ஐ.பி.எல். கிரிக்கெட் நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசப் பயணம்: ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
Local
01 May 2026
ரஜினிகாந்தின் புதிய படத்தில் மகனாக களம் இறங்கும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்
Local
01 May 2026
அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு?
Local
01 May 2026
பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டம் 'தீவிரம்' ஆக உயர்வு: அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் வாய்ப்பு?
Local
01 May 2026
சர்வதேச தொழிலாளர் தினம்: கொழும்பில் பலப்பரீட்சை நடத்தும் அரசியல் கட்சிகள்!
Local
01 May 2026
மும்பை இந்தியன்ஸ் அணியின் பின்னடைவுக்கு யார் காரணம்? - இயன் பிஷப் காட்டம்
Local
01 May 2026