அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை செய்த கடை ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தல்களின்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகும்.
எனினும், குறித்த கடையில் இரண்டு கிலோகிராம் அரிசி 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராமின் விலை 400 ரூபாவாகக் கணக்கிடப்பட்டு, அனுமதிக்கப்பட்ட விலையை விட 140 ரூபா அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனை நடவடிக்கையானது நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
அதிகரிக்கப்பட்ட விலைக்கு அரிசி மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.
பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதன் அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறு நுகர்வோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற சட்டவிரோத விற்பனைகள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற துரித இலக்கத்திற்கு (Hotline) உரிய பற்றுச்சீட்டுகளுடன் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தல்களின்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகும்.
எனினும், குறித்த கடையில் இரண்டு கிலோகிராம் அரிசி 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராமின் விலை 400 ரூபாவாகக் கணக்கிடப்பட்டு, அனுமதிக்கப்பட்ட விலையை விட 140 ரூபா அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனை நடவடிக்கையானது நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
அதிகரிக்கப்பட்ட விலைக்கு அரிசி மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.
பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதன் அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறு நுகர்வோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற சட்டவிரோத விற்பனைகள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற துரித இலக்கத்திற்கு (Hotline) உரிய பற்றுச்சீட்டுகளுடன் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
விஜயவாடாவில் அதிர்ச்சி: 18 மாத பெண் குழந்தையை சுவரில் வீசிய நபர் கைது
Local
01 May 2026
குணா குகையில் விசிலடித்து TVK... TVK... என கோஷமிட்ட இளைஞர்கள்
Local
01 May 2026
அரச நிறுவனங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: புதிய சுற்றறிக்கை வெளியீடு
Local
01 May 2026
வெயிலுக்கு விடை கொடுக்கும் ‘தாமரை இலை’ - சீனாவில் வைரலாகும் விசித்திரமான முறை
Local
01 May 2026
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மரணம்: நால்வர் அடங்கிய மருத்துவக் குழு நியமனம்
Local
01 May 2026
"நாம் உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம்" - சதிகாரக் குழுக்களுக்கு அடிபணியப் போவதில்லை என அரசாங்கம் உறுதி!
Local
01 May 2026
புகைப்படம் எடுப்பதில் மோதல்: திருமண வரவேற்பு விழாவில் மணமகன் - மணமகள் வீட்டார் கைகலப்பு!
Local
01 May 2026
உரத் தட்டுப்பாட்டினால் வாரத்திற்கு 10 பில்லியன் வேளைக்கான உணவுகள் இழக்கப்படும் அபாயம்
Local
01 May 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை - ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்
Local
01 May 2026
அப்பிள் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு: சீனாவில் ஐபோன் விற்பனை சாதனை!
Local
01 May 2026