General23 June 2026

மத்திய கிழக்கு நெருக்கடியால் ஆபிரிக்காவிற்கு ஆபத்தா? IMF எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலை காரணமாக, ஆபிரிக்க கண்டம் பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடிய கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய ஆபிரிக்க பிராந்திய பணிப்பாளர் ஸெய்ன் ஸெய்தானே தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகள் உரம் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனால், அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியானது ஆபிரிக்காவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் உற்பத்திச் செலவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த பொருளாதார அதிர்ச்சியிலிருந்து ஆபிரிக்க பிராந்திய நாடுகள் மீள்வதற்கு உதவுவதே தனது உடனடி முன்னுரிமை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்குத் திரும்புவதற்கு 6 முதல் 7 மாதங்கள் வரை ஆகும் என வளைகுடா நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால், இந்தத் தடங்கல்கள் சீராவதற்கு சில மாதங்கள் எடுக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes