General23 June 2026

அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்டக் கொடுப்பனவுகள், இன்று முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளன.

நலன்புரி நன்மைகள் சபையினால் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள மொத்தம் 270,025 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவுகள் கிடைக்கவுள்ளன.

இதற்காக 3.28 பில்லியன் ரூபாய்க்கும் அதிகத் தொகை பயனாளிகளின் கணக்குகளுக்கு இன்று முதல் நேரடியாகக் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes