மகரகம நாவின்ன பேருந்து நிலையத்தில் நேற்று (23) நடத்தப்பட்ட பரிசோதனையின் போது,பதின்மூன்று பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சக த்தின் தேசிய முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தில், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் மேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகளைச் சேர்ந்த 200 சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
முற்பகல் 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரிகளில் 13 பேர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் (NTMI) மருத்துவ அதிகாரி ஜே.எம். லயனல், தெரிவித்தார்.
பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவைகளை உறுதி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாகும்புர பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சீரற்ற நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்த அமுலாக்கத்தில் சிக்கல்; இரு நாடுகளும் முரண்பட்ட கருத்து
Local
24 June 2026
VAT, சமூக பாதுகாப்பு வரி வரம்பில் மாற்றமில்லை; புதிய அறிவிப்பு!
Local
24 June 2026
நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்கவும்: அமைச்சர் சந்திரசேகருக்கு கடிதம்!
Local
24 June 2026
திடீர் சோதனையில் சிக்கிய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்!
Local
24 June 2026
ரொனால்டோவின் சாதனையுடன் உஸ்பெகிஸ்தானை 5-0 என்ற அடிப்படையில் தோற்கடித்த போர்த்துக்கல்!
Local
24 June 2026
உலகக் கிண்ண கால் பந்தாட்டப் போட்டியில் ரொனால்டோ ஏற்படுத்திய வரலாற்று சாதனை
Local
23 June 2026
ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது: ஈரான் ஜனாதிபதி அதிரடி
Local
23 June 2026
டெங்கு பரவல் தீவிரம் - 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அபாய வலயங்களாக அறிவிப்பு
Local
23 June 2026
சமரியின் அதிரடி சதத்தால் இலங்கை அணிக்கு வெற்றி!
Local
23 June 2026
அமெரிக்கா வழங்கிய 10 உலங்குவானூர்திகள் வான்படையிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பு
Local
23 June 2026