International02 July 2026

பாகிஸ்தான், கட்டார் அதிகாரிகளுடனான அமெரிக்க ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாக ஈரான் கூறுகிறது

தோஹாவில் கட்டார் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்புகள் நிறைவடைந்துள்ளதாக ஈரானிய துணை வெளிவிவகார அமைச்சர் காசிம் காரிபாபாடி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்த சந்திப்புகளின் போது ஈரானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையே எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மீறல்கள் குறித்து அறிக்கை செய்வதற்காக "தொடர்பு வழித்தடம்" (Communication channel) ஒன்று திறக்கப்படும் என்றும் காசிம் காரிபாபாடி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த பேச்சுவார்த்தைகள் "மிகவும் சிறப்பாக" நடைபெற்று வருவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அமெரிக்காவிடம் "மாற்று வழிகள்" உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, லெபனான் நிலவரம் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்டார் அமீர், அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களான விட்கொஃப் (Witkoff) மற்றும் குஷ்னர் (Kushner) ஆகியோரை தோஹாவில் சந்தித்துப் பேசியுள்ளார்.

மறுபுறம், வொஷிங்டனில் கடந்த வாரம் கையெழுத்திடப்பட்டு, ஹிஸ்புல்லா அமைப்பினால் நிராகரிக்கப்பட்ட லெபனான் - இஸ்ரேல் கட்டமைப்புக்கு லெபனான் ஜனாதிபதி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ உரை ஒரு "ஒப்பந்தம் அல்ல" (Not an agreement) என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, காசாவில் போர்நிறுத்த மீறல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் நடத்திய இரு வேறு ஆளில்லா தாக்குதல்களில் ஐந்து பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes