General14 July 2026

தவறுகளை மறைக்க 'சதித்திட்ட' முத்திரை!

அரசாங்கம் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த த சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் அரச நிர்வாகக் கட்டமைப்பு ஸ்தம்பிதமடைந்துள்ளது.

அதேபோன்று சிறைச்சாலை மோதல்களும் கைதிகளின் மரணங்களும் அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளன.

அத்துடன், தமது தோல்விகளை மறைக்க, இந்த சம்பவங்கள் எதிர்க்கட்சியினரின் சதித்திட்டம் என ஆளும் தரப்பு குற்றம் சாட்டுகிறது.

உயிரிழப்புகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களும் அதிகாரிகளின் குடும்பத்தினரும் கடும் விரக்தியில் உள்ளனர்.

தற்காலிக அரசியல் நாடகங்கள் மூலமாக நாட்டின் உண்மையான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes