General23 July 2026

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி எழுத்தாணை மனு! - மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினர் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்காது தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தயார்படுத்தல்களுக்காக மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டி, பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Related recommendation
Hiru TV News | Programmes