General23 July 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எழுத்தாணை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு!

தன்னைக் கைது செய்வதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக கோட்டாபய ராஜபக்ச இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே, மனுவை மேலும் பரிசீலிப்பதற்காக ஆகஸ்ட் 03ஆம் திகதிக்கு ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Related recommendation
Hiru TV News | Programmes