வத்தளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்த பகுதி திருமண மண்டபமொன்றில் இன்று (23) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பிறந்தநாள் விழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருந்த ஒருவரைக் இலக்கு வைத்து, உந்துருளியில் பயணித்த அடையாளம் தெரியாத ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும்,பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலையில் இருந்து ஹபரணை நோக்கி வெளிநாட்டவர் பயணித்த சிற்றூர்தி ஒன்றும், ஹபரணையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த உயர் ரக உந்துருளி ஒன்றும் இன்று மாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இதன்போது உந்துருளி எரிந்து நாசமாகியுள்ள நிலையில், அதனை செலுத்திச்சென்றவர்,காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
வங்கக்கடலில் 36 நாட்கள் தவித்த இலங்கை கடற்றொழிலாளர் இருவர் உயிருடன் மீட்பு!
Local
25 July 2026
28 ஆவது அகவையில் சூரியன் எப் எம் : கொட்டகலையில் மரக்கன்று நாட்டும் நிகழ்வு
Local
25 July 2026
இந்தியாவில் கைதான இருவரையும் அழைத்துவர இலங்கை காவல்துறை விரைகிறது - வத்தளை சம்பவத்துடன் தொடர்பா?
Local
25 July 2026
போராட்டத்தைக் கைவிட்டது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!
Local
25 July 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி - விஷ்மி, ஹர்ஷிதா சதமடித்து சாதனை!
Local
25 July 2026
ஜஃப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் ரத்து: ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு!
Local
25 July 2026
ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல்!
Local
25 July 2026
6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டுத் திரைப்படம் பார்க்கச் சென்ற இளம் தம்பதி கைது!
Local
25 July 2026
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது சீனா!
Local
25 July 2026
அமெரிக்காவில் வீடொன்றில் தீப்பரவல்: 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் உடலங்களாக மீட்பு!
Local
25 July 2026