International25 July 2026

மேற்குக் கரையில் மோதல்: 4 பாலஸ்தீனியர்கள் 2 இஸ்ரேலியக் காவல்துறையினர் பலி - தீவிர இராணுவ நடவடிக்கைக்கு நெதன்யாகு எச்சரிக்கை!

பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை கிராமமான டெல்-இல், இஸ்ரேலிய குடியேறிகளும்,இஸ்ரேலிய படையினரும் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்

இதன்போது இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கி மோதலில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

அத்துடன் இரண்டு இஸ்ரேலிய படையினரும்; கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, பயங்கரவாத மையங்கள்' என்று கருதும் கிராமங்களில் தீவிரப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

கல்கிலியாவுக்கு கிழக்கே உள்ள ஜிட் கிராமத்தை நூற்றுக்கணக்கான குடியேறிகள் தாக்கி, சொத்துக்களை அடித்து நொறுக்கவும் எரிக்கவும் முயன்றனர்.

இஸ்ரேலியப் படைகள் வந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes