International28 July 2026

எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இரு தரப்பும் அறிவித்த நிலையில், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 87.59 டொலர்கள் வரை சரிவடைந்தது.

கடந்த வாரம் 100 டொலர்களை கடந்திருந்த நிலையில், தற்போது 6 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் செங்கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவியது.

இதனால் பணவீக்கம் அதிகரித்து, வட்டி வீதங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டதுடன், ஐரோப்பாவில் எரிவாயு இருப்பும் வரலாற்று அளவில் சரிவைக் கண்டிருந்தது.

தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ள போதிலும், இந்த அமைதி நீடிக்குமா என்ற சந்தேகம் நிலவுவதால், முதலீட்டாளர்கள் மற்றும் உலகச் சந்தை நிலவரங்கள் தொடர்ந்து அவதானத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes