ஸ்டேண்டர்ட் எண்ட் பூவர்ஸ் (S&P) சர்வதேச தரநிர்ணய நிறுவனம் வெளியிட்ட புதிய மதிப்பீட்டின்படி, இலங்கையின் கடன் மதிப்பீட்டை அரசாங்கம் ஸ்திரமான மட்டத்திலேயே பேணி வெற்றி கண்டுள்ளதாகத் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளித் தாக்கம் மற்றும் மத்திய கிழக்குப் போர்ச் சூழல் போன்ற வெளிப்புறச் சவால்களுக்கு மத்தியிலும், சரியான பொருளாதாரப் பாதையில் பயணித்ததால் இந்த நிலை சாத்தியமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அளவிடும் 'பரிமாற்றம் மற்றும் மாற்றத்தக்க தன்மை' (T&C) மதிப்பீட்டில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மிக ஆபத்தான 'CCC' மட்டத்தில் இருந்த இலங்கை, 2025 ஆம் ஆண்டில் 'CCC+' ஆக உயர்ந்து, 2026 ஆம் ஆண்டு தற்போது 'B-' நிலைக்கு முன்னேறியுள்ளது.
இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தாமலும், பொருளாதாரத்தைச் சுருக்காமலும் மத்திய வங்கியின் மூலோபாயத் தலையீடுகள் மூலமே வெளிநாட்டுக் கையிருப்பு உயர்த்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், கடன் வெளிப்படைத்தன்மையில் இலங்கை சர்வதேச அளவில் 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகவும், ஜூலை மாதத்துக்குள் ஆண்டின் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கில் 63.5 சதவீதத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும் எனப் பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை என்பதை இந்த மதிப்பீடு நிரூபித்துள்ளதாகத் தெரிவித்த அவர், சரியான கொள்கை முடிவுகள் மற்றும் நிதி ஒழுக்கம் மூலம் எதிர்காலப் பொருளாதாரச் சவால்களை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.
டிட்வா சூறாவளித் தாக்கம் மற்றும் மத்திய கிழக்குப் போர்ச் சூழல் போன்ற வெளிப்புறச் சவால்களுக்கு மத்தியிலும், சரியான பொருளாதாரப் பாதையில் பயணித்ததால் இந்த நிலை சாத்தியமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அளவிடும் 'பரிமாற்றம் மற்றும் மாற்றத்தக்க தன்மை' (T&C) மதிப்பீட்டில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மிக ஆபத்தான 'CCC' மட்டத்தில் இருந்த இலங்கை, 2025 ஆம் ஆண்டில் 'CCC+' ஆக உயர்ந்து, 2026 ஆம் ஆண்டு தற்போது 'B-' நிலைக்கு முன்னேறியுள்ளது.
இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தாமலும், பொருளாதாரத்தைச் சுருக்காமலும் மத்திய வங்கியின் மூலோபாயத் தலையீடுகள் மூலமே வெளிநாட்டுக் கையிருப்பு உயர்த்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், கடன் வெளிப்படைத்தன்மையில் இலங்கை சர்வதேச அளவில் 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகவும், ஜூலை மாதத்துக்குள் ஆண்டின் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கில் 63.5 சதவீதத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும் எனப் பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை என்பதை இந்த மதிப்பீடு நிரூபித்துள்ளதாகத் தெரிவித்த அவர், சரியான கொள்கை முடிவுகள் மற்றும் நிதி ஒழுக்கம் மூலம் எதிர்காலப் பொருளாதாரச் சவால்களை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.
Latest News
பொருளாதார நெருக்கடி வாடகையைக் குறைக்க ஒரே கட்டிலைப் பகிர்ந்துகொள்ளும் சீன இளைஞர்கள்!
Local
30 July 2026
மூதூர் படுகொலை நடந்து 20 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை - மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை!
Local
30 July 2026
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அரச பணி நியமன ரத்து: தமிழக அரசாங்கம் மேன்முறையீடு!
Local
30 July 2026
இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகளுக்கு இணைய ஊடுருவல் அச்சுறுத்தல்!
Local
30 July 2026
ஈரானை மிகவும் கடுமையாக தாக்கப்போவதாக மீண்டும் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்!
Local
30 July 2026
நீதியமைச்சரை சந்தித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை
Local
30 July 2026
இலங்கையின் கடன் தரவரிசையில் முன்னேற்றம்: பிரதி அமைச்சர் தெரிவிப்பு!
Local
30 July 2026
சீனாவிடமிருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஈரான் பெறுவதாக தகவல்!
Local
30 July 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்றிய 7 அம்ச தீர்மானம்!
Local
30 July 2026
எகிப்தில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: அமெரிக்க எரிவாயு தாங்கிக் கப்பலில் தீப்பரவல்!
Local
29 July 2026