General01 August 2026

மஹர சிறைச்சாலை அமைதியின்மை - காயமடைந்த கைதிகள் 4 பேர் மருத்துமனையில்!

மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, காயமடைந்த கைதிகள் 4 பேர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தநிலையில், சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு பல காவல்துறை குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றதையடுத்து மஹர சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் உறவினர்கள் சிலர் சிறைச்சாலை வளாகத்துக்கு வந்துள்ளதை காண முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes