General01 August 2026

மஹர சிறைச்சாலையைச் சுற்றி வான்படை உலங்கு வானூர்தி, ட்ரோன்கள்!

மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கண்காணிப்பதற்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் வான்படைக்கு சொந்தமான Bell 412 வகையைச் சேர்ந்த உலங்கு வானூர்தி மற்றும் ட்ரோன் கெமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வான்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படை (STF) மற்றும் வான்படையின் கண்காணிப்பு வானூர்திகள் இணைந்து சிறைச்சாலையின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பாதுகாப்பைப் பலப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இன்று (01) பிற்பகல் மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட திடீர் பதற்றம் மற்றும் கட்டடமொன்றில் பரவிய தீ விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்து ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes