இலங்கையில் உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் குறித்து சர்வதேச நீதிபதிகள் சங்கம் (IAJ) தனது பலத்த கவலையை வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சர்வதேச நீதிபதிகள் அமைப்பான சர்வதேச நீதிபதிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது பற்றிய கவலையை விட, இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்ட விதம், நேரம் மற்றும் இதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தே கவலை கொள்வதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நீதித்துறையைப் பாதிக்கும் அரசியலமைப்பு மாற்றங்கள், முறையான ஆலோசனைகள் மற்றும் வெளிப்படையான வழிமுறைகள் மூலமே கொண்டுவரப்பட வேண்டும்.
தன்னிச்சையாக கொண்டுவரப்படும் இத்தகைய அறிவிப்புகள் நீதித்துறை சுயாதீனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தச் சட்டம் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்குப் பலன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவே பரவலாகப் பார்க்கப்படுவதாகவும், இது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என்றும் சர்வதேச நீதிபதிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை நீதித்துறை சேவை சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய அமைப்புகளின் கவலைகளையும் தாம் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நீதிபதிகள் சங்கம், இந்தச் சட்டமூலத்தை தற்போதைய வடிவில் மீளாய்வு செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
1953-இல் ஒஸ்திரியாவில் தொடங்கப்பட்ட சர்வதேச நீதிபதிகள் சங்கம், 93 நாடுகளின் நீதிபதிகள் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி சர்வதேச அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!
Local
10 August 2026
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; ஆனால் மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
Local
10 August 2026
கஞ்சிபானை இம்ரானின் சகா "இரத்மலானை சைமா" உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
10 August 2026
‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்" எனப் பேசிய சிறுமி: வைரலாகும் தற்போதைய காணொளி!
Local
10 August 2026