International09 August 2026

பிரேசிலில் வானூர்தி விபத்துக்குள்ளாகி நால்வர் உயிரிழப்பு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெற்ற வானூர்தி விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று கொலம்பியப் பெண்கள் மற்றும் விமானி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

டிஜுகா தேசிய பூங்காவிற்கு மேலாக இடம்பெற்ற சுற்றுலாப் பயணத்தின்போதே டிஜுகா வனப்பகுதியில் உள்ள 'விஸ்டா சினேசா' பகுதிக்கு அருகில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

15ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக கொலம்பியாவிலிருந்து பிரேசிலுக்கு வருகை தந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரில், மூன்று பெண்களே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வானூர்தியில் மூன்று பயணிகளுக்கு மட்டுமே இடவசதி இருந்ததால், குடும்பத்தினர் இரு குழுக்களாகப் பிரிந்து பயணித்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes