தனது தோல்விகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மகா சங்கத்தினரை அடக்கி ஒடுக்கும் வகையில் அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தன் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு அரசாங்கம் தப்பிக்கப் பார்ப்பதாக அவர் கூறினார்.
வரிக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாதாரண உழைப்பாளிகள், நாளாந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் மாதச் சம்பளக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கக் கணக்குகளில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டுவது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல என்றும், மாறாக புதிய தொழில்முனைவோரையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையுமே அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற அரச நிதி சைபர் திருட்டு சம்பவங்களின் நஷ்டம், உயர்த்தப்பட்ட வரிகள் மூலமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படுகின்றது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதித்துறையின் தாமதங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது.
நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல், புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் நிபுணர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலமே வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தன் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு அரசாங்கம் தப்பிக்கப் பார்ப்பதாக அவர் கூறினார்.
வரிக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாதாரண உழைப்பாளிகள், நாளாந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் மாதச் சம்பளக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கக் கணக்குகளில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டுவது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல என்றும், மாறாக புதிய தொழில்முனைவோரையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையுமே அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற அரச நிதி சைபர் திருட்டு சம்பவங்களின் நஷ்டம், உயர்த்தப்பட்ட வரிகள் மூலமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படுகின்றது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதித்துறையின் தாமதங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது.
நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல், புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் நிபுணர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலமே வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Latest News
இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
Local
09 August 2026
மரங்களை கட்டியணைத்து கதறியழும் பெண் விவசாயி!
Local
09 August 2026
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்!
Local
09 August 2026
பிரேசிலில் வானூர்தி விபத்துக்குள்ளாகி நால்வர் உயிரிழப்பு
Local
09 August 2026
அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிக்கிறது - நாமல் சாடல்
Local
09 August 2026
AI தொழில்நுட்பத்தால் வந்த வினை : இணையவாசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி ஹாசனின் அதிரடி வழக்கு!
Local
09 August 2026
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
Local
09 August 2026
"அம்மா பற்றி ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த ஒரு விடயம்..." - இணையத்தில் வைரலாகும் நேர்காணல்!
Local
09 August 2026
15 வயதா? 18 வயதா? - வைபவ் சூர்யவன்சி குறித்து பிரெட் லீ கருத்து!
Local
09 August 2026
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் ‘டொக்ஸிக்’ திரைப்பட ட்ரெய்லர்
Local
09 August 2026