கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) எதிர்காலத்தில் குடியேறுவதற்கு திட்டமிடும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதால், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படலாம் என உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் எச்சரித்துள்ளார்.
துறைசார் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர், துறைமுக நகரத்தில் குடியேறக்கூடியவர்கள் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட போதிலும், அவர்களால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.
"ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றால், அவர்களால் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வாக்களிக்க முடியும்.
ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர்களுக்கு இடம் எதுவும் இல்லை. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்" என்று தெரிவித்த அவர், துறைமுக நகரத்துக்காக பிரத்தியேகமாக தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும், 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம், துறைமுக நகர நிலப்பரப்பு ஏற்கனவே கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் மாவட்ட ரீதியிலான பிரதிநிதித்துவம் தொடர்பான கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர்கள் வாதிட்டனர்.
இதற்கு பதிலளித்த எஸ்.எம். மரிக்கார், வர்த்தமானி அறிவித்தலானது நாடு தழுவிய மற்றும் மாவட்ட ரீதியிலான தேர்தல்களுக்கான சேர்க்கையை உறுதிப்படுத்திய போதிலும், உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவப் பிரச்சினையை அது தீர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டால், அது துறைமுக நகரத் திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போது அங்கு நிரந்தர வாக்காளர்களாக மக்கள் யாரும் வசிக்கத் தொடங்காத நிலையிலும், எதிர்காலத்தில் இங்கு குடியமரப்போகும் மக்களுக்கான வாக்களிக்கும் உரிமை மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவம் குறித்தே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இந்த விவாதத்தை எழுப்பியுள்ளார்.
துறைசார் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர், துறைமுக நகரத்தில் குடியேறக்கூடியவர்கள் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட போதிலும், அவர்களால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.
"ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றால், அவர்களால் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வாக்களிக்க முடியும்.
ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர்களுக்கு இடம் எதுவும் இல்லை. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்" என்று தெரிவித்த அவர், துறைமுக நகரத்துக்காக பிரத்தியேகமாக தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும், 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம், துறைமுக நகர நிலப்பரப்பு ஏற்கனவே கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் மாவட்ட ரீதியிலான பிரதிநிதித்துவம் தொடர்பான கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர்கள் வாதிட்டனர்.
இதற்கு பதிலளித்த எஸ்.எம். மரிக்கார், வர்த்தமானி அறிவித்தலானது நாடு தழுவிய மற்றும் மாவட்ட ரீதியிலான தேர்தல்களுக்கான சேர்க்கையை உறுதிப்படுத்திய போதிலும், உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவப் பிரச்சினையை அது தீர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டால், அது துறைமுக நகரத் திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போது அங்கு நிரந்தர வாக்காளர்களாக மக்கள் யாரும் வசிக்கத் தொடங்காத நிலையிலும், எதிர்காலத்தில் இங்கு குடியமரப்போகும் மக்களுக்கான வாக்களிக்கும் உரிமை மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவம் குறித்தே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இந்த விவாதத்தை எழுப்பியுள்ளார்.
Latest News
பெல்லன்வில எசல பெரஹர: ஆகஸ்ட் 13 முதல் பல வீதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
Local
12 August 2026
கொலம்பியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250-ஐத் தாண்டியது
Local
12 August 2026
இன்று இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு : பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
Local
12 August 2026
இந்திய கிரிக்கட் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கையின் ஃபர்வீஸ் மஹ்ரூஃப் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
12 August 2026
இந்திய அணிக்குள் சிகையலங்கார நிபுணரான சிராஜ்!
Local
12 August 2026
ஏர் இந்தியா விமானிக்கு போதைப்பொருள் பரிசோதனையில் பாதக முடிவு: உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை வெளியீடு
Local
12 August 2026
14 ஆவது ஆசிய வலைப்பந்து தொடர்: இந்தியாவை 100-34 என வீழ்த்தி இலங்கை அணி அரை இறுதிக்குத் தகுதி
Local
12 August 2026
தேவையற்ற தொலைபேசி விளம்பர அழைப்புகளுக்கு பிரான்ஸ் தடை
Local
12 August 2026
வட்டி வீதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியமில்லை: இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தகவல்
Local
12 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கடத்தல்: சிறைச்சாலை அதிகாரி கைது
Local
12 August 2026