கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அத்துடன், இந்த நிலநடுக்கத்தில் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளும், பல பிராந்திய வானூர்தி நிலையங்களும் சேதமடைந்துள்ளன.
கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் 103 கிலோமீற்றர் (64 மைல்) ஆழத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 07:34 க்கு7.4 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு கொலம்பியா முழுவதும் நூற்றுக்கணக்கான மைல் தூரத்துக்கு இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
கொலம்பியாவின் கோபி உற்பத்தி பிராந்தியத்தில் அமைந்துள்ள பெரெய்ரா (Pereira) நகரத்தில் அதிக அளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர சுற்றியுள்ள நகரங்களும், 'வேலே டெல் கௌகா' (Valle del Cauca) பிராந்தியமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் போகொடாவில் (Bogotá) மரங்கள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் கடுமையாக அசைந்ததுடன், கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் உள்கட்டமைப்புகளுக்கு பாரிய சேதங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளான வெனிசுவேலா, ஈக்வடோர் மற்றும் பனாமா வரை உணரப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo de la Espriella) நாட்டில் 'தேசிய அனர்த்த நிலைமையை' பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் அவசர நிலையை எதிர்கொள்வதற்கும் பாதீடுகளை மாற்றி அமைப்பதற்கும் அவருக்கு விசேட அதிகாரங்கள் கிடைக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியாக பதவியேற்ற அவர், சில நாட்களிலேயே இந்த பெரும் பேரிடரை எதிர்கொண்டுள்ளார்.
கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அத்துடன், இந்த நிலநடுக்கத்தில் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளும், பல பிராந்திய வானூர்தி நிலையங்களும் சேதமடைந்துள்ளன.
கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் 103 கிலோமீற்றர் (64 மைல்) ஆழத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 07:34 க்கு7.4 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு கொலம்பியா முழுவதும் நூற்றுக்கணக்கான மைல் தூரத்துக்கு இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
கொலம்பியாவின் கோபி உற்பத்தி பிராந்தியத்தில் அமைந்துள்ள பெரெய்ரா (Pereira) நகரத்தில் அதிக அளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர சுற்றியுள்ள நகரங்களும், 'வேலே டெல் கௌகா' (Valle del Cauca) பிராந்தியமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் போகொடாவில் (Bogotá) மரங்கள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகள் கடுமையாக அசைந்ததுடன், கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் உள்கட்டமைப்புகளுக்கு பாரிய சேதங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளான வெனிசுவேலா, ஈக்வடோர் மற்றும் பனாமா வரை உணரப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo de la Espriella) நாட்டில் 'தேசிய அனர்த்த நிலைமையை' பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் அவசர நிலையை எதிர்கொள்வதற்கும் பாதீடுகளை மாற்றி அமைப்பதற்கும் அவருக்கு விசேட அதிகாரங்கள் கிடைக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியாக பதவியேற்ற அவர், சில நாட்களிலேயே இந்த பெரும் பேரிடரை எதிர்கொண்டுள்ளார்.
Latest News
சாதனையாளன் விஜய்யை விட, சுதந்திர தின நிகழ்வில் பேசு பொருளாகிய நடிகை த்ரிஷா!
Local
16 August 2026
6 ஆண்டுகளில் 709 கைதிகள் தப்பி ஓட்டம் : பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - தீவிரமாகும் கண்காணிப்பு நடவடிக்கைகள்!
Local
16 August 2026
மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து!
Local
16 August 2026
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்" – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
Local
16 August 2026
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
Local
16 August 2026
கொரியப் போரை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!
Local
16 August 2026
தாய் மற்றும் தம்பியின் உயிரை பறித்த 17 வயதுச் சிறுவன்: 'ChatGPT' செயலியைக் கொண்டு திட்டம் தீட்டியமை அம்பலம்!
Local
16 August 2026
80ஆவது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தடுமாற்றம் - அயர்லாந்து கொடியை அணிந்தார் எனவும் விமர்சனம்!
Local
16 August 2026
சிவப்பு அறிவித்தல் குற்றவாளிகள் 73 பேர் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர்: காவல்துறை மாஅதிபர்
Local
16 August 2026
"பாலம் கட்டும்போது படகோட்டிக்கு சிக்கல் ஏற்படுவது இயல்பே" – விமர்சனங்களுக்கு உவமையில் நளிந்த பதில்!
Local
16 August 2026