இந்தியாவில் பல அதிசயங்களும் நூற்றாண்டுகள் கடந்த வரலாறும் கொண்ட ஆன்மீகத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் குவாலியர் நகரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகோனியாவில் அமைந்துள்ள 'கக்கன்மாத் சிவன் கோயில்' ஆராய்ச்சியாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு மர்மக் கோயிலாகக் காட்சி அளிக்கிறது.
பொதுவாக எந்தவொரு பெரிய கட்டமைப்பும் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதற்கு நடுவில் சிமெண்ட் அல்லது சுண்ணாம்பு போன்ற கலவைகளைக் கொண்டு பூசித் தான் கட்டப்படும். ஆனால், இந்தக் கோயில் எந்தவிதமான பசையோ, சிமெண்டோ இல்லாமல் வெறும் கற்களை மட்டும் கொண்டு சுமார் 115 அடி உயரத்தில் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.
எந்தவித இணைப்புக் கலவையும் இல்லாமல் கட்டப்பட்டிருந்தாலும், இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளைக் கடந்து பல்வேறு வெள்ளம், புயல், காற்று மற்றும் நிலநடுக்கங்களைச் சந்தித்து இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. அருகில் இருந்த பல கட்டிடங்கள் அழிந்துவிட்ட போதிலும், இந்தக் கோயில் உறுதியாக நிற்பதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டறிந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்தக் கோயில் உருவாக்கம் குறித்து இரண்டு விதமான தகவல்கள் நிலவுகின்றன:
11-ஆம் நூற்றாண்டில் கச்சபகத வம்சத்தைச் சேர்ந்த மன்னன் கீர்த்திராஜாவின் மனைவி ககன்வதி, தீவிர சிவபக்தையாக இருந்ததாகவும், இவரது வேண்டுகோளின்படியே இந்த பிரம்மாண்ட சிவன் கோயில் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
மறுபுறம், சிவபெருமானின் கட்டளைப்படி பேய்களும் பூதங்களும் சேர்ந்து அசுர பலத்துடன் ஒரே இரவில் இந்தக் கோயிலைக் கட்டியதாக இந்தப் பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
அதிகாலை நெருங்கியதும் பேய்களுக்குரிய சக்தி குறைந்துவிடும் என்பதால், பாதியில் வேலைகளை அரைகுறையாக விட்டுவிட்டு அவை மறைந்துவிட்டதாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன.
பல்வேறு மர்மங்களும் அதிசயங்களும் நிறைந்த இந்தக் கோயில், தினமும் காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டு சரியாக மாலை 6 மணிக்கு மூடப்படுகிறது.
பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தொடரும் மர்மங்கள் காரணமாக, அதற்குமேல் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தக் கோயிலைச் முழுமையாகச் சுற்றிப் பார்த்து அதன் அழகை அனுபவிக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது தேவைப்படும்.
Latest News
10 வயதுச் சிறுமியிடம் முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக கூறப்படும் தந்தையும் தாத்தாவும் தலைமறைவு
Local
14 August 2026
மலேசியாவில் நடந்தது என்ன? - "கஞ்சிபானை இம்ரான்" விவகாரத்தில் வெளிவந்த உண்மை!
Local
14 August 2026
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய இளைஞன், பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு
Local
14 August 2026
கிழக்கு மாகாணத்திற்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் மோசடி!
Local
14 August 2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசுப் பணி ஆணை இரத்துக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Local
14 August 2026
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சிங்கப்பூர் பெண்களை எதிர்கொள்ளும் இலங்கை பெண்கள்!
Local
14 August 2026
கண்டியில் நான்கு வயது சிறுமியை விட்டுச் சென்ற பெண் - காவல்துறை தீவிர தேடுதல்!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 August 2026
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026