இந்தியாவில் பல அதிசயங்களும் நூற்றாண்டுகள் கடந்த வரலாறும் கொண்ட ஆன்மீகத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் குவாலியர் நகரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகோனியாவில் அமைந்துள்ள 'கக்கன்மாத் சிவன் கோயில்' ஆராய்ச்சியாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு மர்மக் கோயிலாகக் காட்சி அளிக்கிறது.
பொதுவாக எந்தவொரு பெரிய கட்டமைப்பும் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதற்கு நடுவில் சிமெண்ட் அல்லது சுண்ணாம்பு போன்ற கலவைகளைக் கொண்டு பூசித் தான் கட்டப்படும். ஆனால், இந்தக் கோயில் எந்தவிதமான பசையோ, சிமெண்டோ இல்லாமல் வெறும் கற்களை மட்டும் கொண்டு சுமார் 115 அடி உயரத்தில் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.
எந்தவித இணைப்புக் கலவையும் இல்லாமல் கட்டப்பட்டிருந்தாலும், இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளைக் கடந்து பல்வேறு வெள்ளம், புயல், காற்று மற்றும் நிலநடுக்கங்களைச் சந்தித்து இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. அருகில் இருந்த பல கட்டிடங்கள் அழிந்துவிட்ட போதிலும், இந்தக் கோயில் உறுதியாக நிற்பதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டறிந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்தக் கோயில் உருவாக்கம் குறித்து இரண்டு விதமான தகவல்கள் நிலவுகின்றன:
11-ஆம் நூற்றாண்டில் கச்சபகத வம்சத்தைச் சேர்ந்த மன்னன் கீர்த்திராஜாவின் மனைவி ககன்வதி, தீவிர சிவபக்தையாக இருந்ததாகவும், இவரது வேண்டுகோளின்படியே இந்த பிரம்மாண்ட சிவன் கோயில் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
மறுபுறம், சிவபெருமானின் கட்டளைப்படி பேய்களும் பூதங்களும் சேர்ந்து அசுர பலத்துடன் ஒரே இரவில் இந்தக் கோயிலைக் கட்டியதாக இந்தப் பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
அதிகாலை நெருங்கியதும் பேய்களுக்குரிய சக்தி குறைந்துவிடும் என்பதால், பாதியில் வேலைகளை அரைகுறையாக விட்டுவிட்டு அவை மறைந்துவிட்டதாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன.
பல்வேறு மர்மங்களும் அதிசயங்களும் நிறைந்த இந்தக் கோயில், தினமும் காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டு சரியாக மாலை 6 மணிக்கு மூடப்படுகிறது.
பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தொடரும் மர்மங்கள் காரணமாக, அதற்குமேல் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தக் கோயிலைச் முழுமையாகச் சுற்றிப் பார்த்து அதன் அழகை அனுபவிக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது தேவைப்படும்.
Latest News
சுற்றுலா வருவாய் சரிவு: ஆறுதலளிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் பணவனுப்பல்!
Local
14 August 2026
டிக்வெல்லவின் மீள்வருகை - பின்னணி காரணத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா
Local
14 August 2026
இன்ஸ்டா பதிவின் பின்னணியில் 2 ஆண்டுகால வலி: நிவின் பாலி கூறியதை மீண்டும் பகிர்ந்த அனுபமா
Local
14 August 2026
ஜப்பானில் பெய்த கனமழையால் பேரழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கையின் நிலை என்ன ?
Local
14 August 2026
இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை – பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
Local
14 August 2026
"விஸ்வநாத் & சன்ஸ்" மீண்டும் பார்க்கத் தூண்டும் திரைப்படம்: நடிகர் கார்த்தி புகழாரம்!
Local
14 August 2026
அந்த உணர்வு வந்தால் அந்த இடத்திலேயே நிற்க மாட்டேன் – திறந்த மனதுடன் பதிலளித்த அனிருத்!
Local
14 August 2026
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்
Local
14 August 2026
நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஆகஸ்ட் 18ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
Local
14 August 2026
இந்திய உந்துருளிகளில் அதிக வேகத்தில் செல்லும் இளைஞர்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை
Local
14 August 2026