General12 August 2026

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்க வேண்டாம் - மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை பகிரங்கப்படுத்தி அவர் இந்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes