மகாத்மா காந்தி, இலங்கையின் முன்னோடி கட்டடக்கலைஞர் மினெட் டி சில்வா மற்றும் காந்தியின் 1927 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தின் போது நிகழ்ந்த, அதிகம் அறியப்படாத ஒரு சம்பவம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஓவியம் ஒன்று, புது டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
‘காந்தியும் மினெட் டி சில்வாவும்’ என பெயரிடப்பட்ட இந்த ஓவியம், இலங்கையின் பிரபல ஓவியர் ராஜா சேகர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தபோபூமி அமைப்பின் பணிப்பாளர் நமிதா சுவாமி ஆகியோரால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
1927 ஆம் ஆண்டில் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவருக்கு ஆட்டுப்பால் தேடிக் கொடுக்கும் பொறுப்பு 9 வயது சிறுமியாக இருந்த மினெட் டி சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர் குமாரி ஜயவர்தன குறிப்பிட்டுகிறார்.
இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, 'ஒளிவிலகல்' (Refractive style) எனப்படும் தனது தனித்துவமான கணிதவியல் வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் பாணியில் ஓவியர் ராஜா சேகர் இதனை வரைந்துள்ளார்.
காந்தியின் எளிமைத் தத்துவத்தையும் இலங்கையின் கிராமிய அழகையும் இணைக்கும் வகையில், இந்த ஓவியத்தில் ஆடு முக்கிய அடையாளமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மினெட் டி சில்வா வடிவமைப்பு செய்த வீட்டிலேயே தாம் வசித்ததாகக் குறிப்பிட்டுள்ள ஓவியர் ராஜா சேகர், அதனால் இந்த ஓவியத்தின் கருப்பொருளுடன் தனக்கு நெருங்கிய பிணைப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார, வரலாற்று மற்றும் இருநாட்டு மக்களிடையேயான இருதரப்பு உறவுகளைப் பறைசாற்றும் வகையில் இந்த ஓவியம் உயர்ஸ்தானிகராலயத்தின் நிரந்தரச் சேகரிப்பில் இணைக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் நன்றியுடன் தெரிவித்துள்ளனர்.
‘காந்தியும் மினெட் டி சில்வாவும்’ என பெயரிடப்பட்ட இந்த ஓவியம், இலங்கையின் பிரபல ஓவியர் ராஜா சேகர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தபோபூமி அமைப்பின் பணிப்பாளர் நமிதா சுவாமி ஆகியோரால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
1927 ஆம் ஆண்டில் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவருக்கு ஆட்டுப்பால் தேடிக் கொடுக்கும் பொறுப்பு 9 வயது சிறுமியாக இருந்த மினெட் டி சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர் குமாரி ஜயவர்தன குறிப்பிட்டுகிறார்.
இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, 'ஒளிவிலகல்' (Refractive style) எனப்படும் தனது தனித்துவமான கணிதவியல் வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் பாணியில் ஓவியர் ராஜா சேகர் இதனை வரைந்துள்ளார்.
காந்தியின் எளிமைத் தத்துவத்தையும் இலங்கையின் கிராமிய அழகையும் இணைக்கும் வகையில், இந்த ஓவியத்தில் ஆடு முக்கிய அடையாளமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மினெட் டி சில்வா வடிவமைப்பு செய்த வீட்டிலேயே தாம் வசித்ததாகக் குறிப்பிட்டுள்ள ஓவியர் ராஜா சேகர், அதனால் இந்த ஓவியத்தின் கருப்பொருளுடன் தனக்கு நெருங்கிய பிணைப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார, வரலாற்று மற்றும் இருநாட்டு மக்களிடையேயான இருதரப்பு உறவுகளைப் பறைசாற்றும் வகையில் இந்த ஓவியம் உயர்ஸ்தானிகராலயத்தின் நிரந்தரச் சேகரிப்பில் இணைக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் நன்றியுடன் தெரிவித்துள்ளனர்.
Latest News
'பெக்கோ சமனின்' தாயார் மீதான துப்பாக்கிச்சூடு - சந்தேகநபர்களின் உந்துருளி மீட்பு!
Local
13 August 2026
நாட்டில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : முதலிடத்தில் எந்த மாவட்டம் - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
Local
13 August 2026
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு
Local
13 August 2026
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
13 August 2026
ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞர் உயிரிழப்பு : 18 வயது சந்தேகநபர் கைது!
Local
13 August 2026
நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானியப் போர்க்கப்பலின் சிதைவுகள்!
Local
13 August 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் பதவியேற்பு!
Local
13 August 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் புதிய குழிகளைத் தோண்டுவது குறித்து இன்று தீர்மானம்!
Local
13 August 2026
அமெரிக்க சிறைச்சாலையில் மின்னல் தாக்கி 16 கைதிகள் காயம்!
Local
13 August 2026
“நாட்டின் மிகப்பெரிய தந்தமுடைய யானையை காணவில்லை: யானைகள் அழிந்தால் சுற்றாடல் சமநிலை சீர்குலையும்”
Local
13 August 2026