மகாத்மா காந்தி, இலங்கையின் முன்னோடி கட்டடக்கலைஞர் மினெட் டி சில்வா மற்றும் காந்தியின் 1927 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தின் போது நிகழ்ந்த, அதிகம் அறியப்படாத ஒரு சம்பவம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஓவியம் ஒன்று, புது டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
‘காந்தியும் மினெட் டி சில்வாவும்’ என பெயரிடப்பட்ட இந்த ஓவியம், இலங்கையின் பிரபல ஓவியர் ராஜா சேகர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தபோபூமி அமைப்பின் பணிப்பாளர் நமிதா சுவாமி ஆகியோரால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
1927 ஆம் ஆண்டில் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவருக்கு ஆட்டுப்பால் தேடிக் கொடுக்கும் பொறுப்பு 9 வயது சிறுமியாக இருந்த மினெட் டி சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர் குமாரி ஜயவர்தன குறிப்பிட்டுகிறார்.
இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, 'ஒளிவிலகல்' (Refractive style) எனப்படும் தனது தனித்துவமான கணிதவியல் வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் பாணியில் ஓவியர் ராஜா சேகர் இதனை வரைந்துள்ளார்.
காந்தியின் எளிமைத் தத்துவத்தையும் இலங்கையின் கிராமிய அழகையும் இணைக்கும் வகையில், இந்த ஓவியத்தில் ஆடு முக்கிய அடையாளமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மினெட் டி சில்வா வடிவமைப்பு செய்த வீட்டிலேயே தாம் வசித்ததாகக் குறிப்பிட்டுள்ள ஓவியர் ராஜா சேகர், அதனால் இந்த ஓவியத்தின் கருப்பொருளுடன் தனக்கு நெருங்கிய பிணைப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார, வரலாற்று மற்றும் இருநாட்டு மக்களிடையேயான இருதரப்பு உறவுகளைப் பறைசாற்றும் வகையில் இந்த ஓவியம் உயர்ஸ்தானிகராலயத்தின் நிரந்தரச் சேகரிப்பில் இணைக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் நன்றியுடன் தெரிவித்துள்ளனர்.
‘காந்தியும் மினெட் டி சில்வாவும்’ என பெயரிடப்பட்ட இந்த ஓவியம், இலங்கையின் பிரபல ஓவியர் ராஜா சேகர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தபோபூமி அமைப்பின் பணிப்பாளர் நமிதா சுவாமி ஆகியோரால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
1927 ஆம் ஆண்டில் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவருக்கு ஆட்டுப்பால் தேடிக் கொடுக்கும் பொறுப்பு 9 வயது சிறுமியாக இருந்த மினெட் டி சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர் குமாரி ஜயவர்தன குறிப்பிட்டுகிறார்.
இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, 'ஒளிவிலகல்' (Refractive style) எனப்படும் தனது தனித்துவமான கணிதவியல் வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் பாணியில் ஓவியர் ராஜா சேகர் இதனை வரைந்துள்ளார்.
காந்தியின் எளிமைத் தத்துவத்தையும் இலங்கையின் கிராமிய அழகையும் இணைக்கும் வகையில், இந்த ஓவியத்தில் ஆடு முக்கிய அடையாளமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மினெட் டி சில்வா வடிவமைப்பு செய்த வீட்டிலேயே தாம் வசித்ததாகக் குறிப்பிட்டுள்ள ஓவியர் ராஜா சேகர், அதனால் இந்த ஓவியத்தின் கருப்பொருளுடன் தனக்கு நெருங்கிய பிணைப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார, வரலாற்று மற்றும் இருநாட்டு மக்களிடையேயான இருதரப்பு உறவுகளைப் பறைசாற்றும் வகையில் இந்த ஓவியம் உயர்ஸ்தானிகராலயத்தின் நிரந்தரச் சேகரிப்பில் இணைக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் நன்றியுடன் தெரிவித்துள்ளனர்.
Latest News
நாட்டின் பல பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Local
14 August 2026
தென்னிந்திய சினிமாவையே ஆக்கிரமிக்கும் சாய் அபயங்கர்! கைவசம் உள்ள முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்கள்
Local
14 August 2026
"மண்டபத்திற்குள் விருந்தாளியாக நுழைந்த முதலை!" - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!
Local
14 August 2026
இலங்கை - இந்திய டெஸ்ட் தொடருக்கான செம்பியன் கிண்ணம் அறிமுகம்!
Local
14 August 2026
சுற்றுலா வருவாய் சரிவு: ஆறுதலளிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் பணவனுப்பல்!
Local
14 August 2026
டிக்வெல்லவின் மீள்வருகை - பின்னணி காரணத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா
Local
14 August 2026
இன்ஸ்டா பதிவின் பின்னணியில் 2 ஆண்டுகால வலி: நிவின் பாலி கூறியதை மீண்டும் பகிர்ந்த அனுபமா
Local
14 August 2026
ஜப்பானில் பெய்த கனமழையால் பேரழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கையின் நிலை என்ன ?
Local
14 August 2026
இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை – பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
Local
14 August 2026
"விஸ்வநாத் & சன்ஸ்" மீண்டும் பார்க்கத் தூண்டும் திரைப்படம்: நடிகர் கார்த்தி புகழாரம்!
Local
14 August 2026