மகாத்மா காந்தி, இலங்கையின் முன்னோடி கட்டடக்கலைஞர் மினெட் டி சில்வா மற்றும் காந்தியின் 1927 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தின் போது நிகழ்ந்த, அதிகம் அறியப்படாத ஒரு சம்பவம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஓவியம் ஒன்று, புது டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
‘காந்தியும் மினெட் டி சில்வாவும்’ என பெயரிடப்பட்ட இந்த ஓவியம், இலங்கையின் பிரபல ஓவியர் ராஜா சேகர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தபோபூமி அமைப்பின் பணிப்பாளர் நமிதா சுவாமி ஆகியோரால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
1927 ஆம் ஆண்டில் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவருக்கு ஆட்டுப்பால் தேடிக் கொடுக்கும் பொறுப்பு 9 வயது சிறுமியாக இருந்த மினெட் டி சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர் குமாரி ஜயவர்தன குறிப்பிட்டுகிறார்.
இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, 'ஒளிவிலகல்' (Refractive style) எனப்படும் தனது தனித்துவமான கணிதவியல் வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் பாணியில் ஓவியர் ராஜா சேகர் இதனை வரைந்துள்ளார்.
காந்தியின் எளிமைத் தத்துவத்தையும் இலங்கையின் கிராமிய அழகையும் இணைக்கும் வகையில், இந்த ஓவியத்தில் ஆடு முக்கிய அடையாளமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மினெட் டி சில்வா வடிவமைப்பு செய்த வீட்டிலேயே தாம் வசித்ததாகக் குறிப்பிட்டுள்ள ஓவியர் ராஜா சேகர், அதனால் இந்த ஓவியத்தின் கருப்பொருளுடன் தனக்கு நெருங்கிய பிணைப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார, வரலாற்று மற்றும் இருநாட்டு மக்களிடையேயான இருதரப்பு உறவுகளைப் பறைசாற்றும் வகையில் இந்த ஓவியம் உயர்ஸ்தானிகராலயத்தின் நிரந்தரச் சேகரிப்பில் இணைக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் நன்றியுடன் தெரிவித்துள்ளனர்.
‘காந்தியும் மினெட் டி சில்வாவும்’ என பெயரிடப்பட்ட இந்த ஓவியம், இலங்கையின் பிரபல ஓவியர் ராஜா சேகர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தபோபூமி அமைப்பின் பணிப்பாளர் நமிதா சுவாமி ஆகியோரால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
1927 ஆம் ஆண்டில் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவருக்கு ஆட்டுப்பால் தேடிக் கொடுக்கும் பொறுப்பு 9 வயது சிறுமியாக இருந்த மினெட் டி சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர் குமாரி ஜயவர்தன குறிப்பிட்டுகிறார்.
இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, 'ஒளிவிலகல்' (Refractive style) எனப்படும் தனது தனித்துவமான கணிதவியல் வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் பாணியில் ஓவியர் ராஜா சேகர் இதனை வரைந்துள்ளார்.
காந்தியின் எளிமைத் தத்துவத்தையும் இலங்கையின் கிராமிய அழகையும் இணைக்கும் வகையில், இந்த ஓவியத்தில் ஆடு முக்கிய அடையாளமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மினெட் டி சில்வா வடிவமைப்பு செய்த வீட்டிலேயே தாம் வசித்ததாகக் குறிப்பிட்டுள்ள ஓவியர் ராஜா சேகர், அதனால் இந்த ஓவியத்தின் கருப்பொருளுடன் தனக்கு நெருங்கிய பிணைப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார, வரலாற்று மற்றும் இருநாட்டு மக்களிடையேயான இருதரப்பு உறவுகளைப் பறைசாற்றும் வகையில் இந்த ஓவியம் உயர்ஸ்தானிகராலயத்தின் நிரந்தரச் சேகரிப்பில் இணைக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் நன்றியுடன் தெரிவித்துள்ளனர்.
Latest News
டெங்கு பாதிப்பு: இலங்கையில் 92,000 ஐ கடந்த நோயாளர்களின் எண்ணிக்கை!
Local
16 August 2026
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது பங்களாதேஷ் அணி!
Local
16 August 2026
கொத்துக்கொத்தாக இறந்து மிதக்கும் மீன்கள் : வாழ்வாதாரம் இழந்து கடற்றொழிலாளர்கள் சோகம் - பின்னணியில் நடப்பது என்ன?
Local
16 August 2026
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்த இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்!
Local
16 August 2026
நயினாரின் கருத்தை கண்டித்துள்ளார் நடிகை குஷ்பு!
Local
16 August 2026
சினிமாவில் இருந்து திடீர் ஓய்வு? : சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா!
Local
16 August 2026
கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் : காவல்துறை வெளியிட்ட அவசர அறிவிப்பு!
Local
16 August 2026
சர்வதேச கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்த ஸ்பெயின் கிரிக்கெட் அணி !
Local
16 August 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வெளியே செல்வோரின் கவனத்திற்கு!
Local
16 August 2026
சாதனையாளன் விஜய்யை விட, சுதந்திர தின நிகழ்வில் பேசு பொருளாகிய நடிகை த்ரிஷா!
Local
16 August 2026