மகாத்மா காந்தி, இலங்கையின் முன்னோடி கட்டடக்கலைஞர் மினெட் டி சில்வா மற்றும் காந்தியின் 1927 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தின் போது நிகழ்ந்த, அதிகம் அறியப்படாத ஒரு சம்பவம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஓவியம் ஒன்று, புது டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
‘காந்தியும் மினெட் டி சில்வாவும்’ என பெயரிடப்பட்ட இந்த ஓவியம், இலங்கையின் பிரபல ஓவியர் ராஜா சேகர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தபோபூமி அமைப்பின் பணிப்பாளர் நமிதா சுவாமி ஆகியோரால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
1927 ஆம் ஆண்டில் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவருக்கு ஆட்டுப்பால் தேடிக் கொடுக்கும் பொறுப்பு 9 வயது சிறுமியாக இருந்த மினெட் டி சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர் குமாரி ஜயவர்தன குறிப்பிட்டுகிறார்.
இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, 'ஒளிவிலகல்' (Refractive style) எனப்படும் தனது தனித்துவமான கணிதவியல் வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் பாணியில் ஓவியர் ராஜா சேகர் இதனை வரைந்துள்ளார்.
காந்தியின் எளிமைத் தத்துவத்தையும் இலங்கையின் கிராமிய அழகையும் இணைக்கும் வகையில், இந்த ஓவியத்தில் ஆடு முக்கிய அடையாளமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மினெட் டி சில்வா வடிவமைப்பு செய்த வீட்டிலேயே தாம் வசித்ததாகக் குறிப்பிட்டுள்ள ஓவியர் ராஜா சேகர், அதனால் இந்த ஓவியத்தின் கருப்பொருளுடன் தனக்கு நெருங்கிய பிணைப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார, வரலாற்று மற்றும் இருநாட்டு மக்களிடையேயான இருதரப்பு உறவுகளைப் பறைசாற்றும் வகையில் இந்த ஓவியம் உயர்ஸ்தானிகராலயத்தின் நிரந்தரச் சேகரிப்பில் இணைக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் நன்றியுடன் தெரிவித்துள்ளனர்.
‘காந்தியும் மினெட் டி சில்வாவும்’ என பெயரிடப்பட்ட இந்த ஓவியம், இலங்கையின் பிரபல ஓவியர் ராஜா சேகர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தபோபூமி அமைப்பின் பணிப்பாளர் நமிதா சுவாமி ஆகியோரால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
1927 ஆம் ஆண்டில் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவருக்கு ஆட்டுப்பால் தேடிக் கொடுக்கும் பொறுப்பு 9 வயது சிறுமியாக இருந்த மினெட் டி சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர் குமாரி ஜயவர்தன குறிப்பிட்டுகிறார்.
இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, 'ஒளிவிலகல்' (Refractive style) எனப்படும் தனது தனித்துவமான கணிதவியல் வடிவங்கள் மற்றும் வண்ணங்களின் பாணியில் ஓவியர் ராஜா சேகர் இதனை வரைந்துள்ளார்.
காந்தியின் எளிமைத் தத்துவத்தையும் இலங்கையின் கிராமிய அழகையும் இணைக்கும் வகையில், இந்த ஓவியத்தில் ஆடு முக்கிய அடையாளமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மினெட் டி சில்வா வடிவமைப்பு செய்த வீட்டிலேயே தாம் வசித்ததாகக் குறிப்பிட்டுள்ள ஓவியர் ராஜா சேகர், அதனால் இந்த ஓவியத்தின் கருப்பொருளுடன் தனக்கு நெருங்கிய பிணைப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார, வரலாற்று மற்றும் இருநாட்டு மக்களிடையேயான இருதரப்பு உறவுகளைப் பறைசாற்றும் வகையில் இந்த ஓவியம் உயர்ஸ்தானிகராலயத்தின் நிரந்தரச் சேகரிப்பில் இணைக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் நன்றியுடன் தெரிவித்துள்ளனர்.
Latest News
கடவுளுக்கு நன்றி!” – சுதந்திர தின நிகழ்வில் முதலமைச்சரின் தாய் உருக்கம்
Local
15 August 2026
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் : செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!
Local
15 August 2026
கைது செய்யப்பட்ட"ஷிரான் பாசிக்" என்பவருக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு
Local
15 August 2026
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: நாணயசுழற்சியில் இந்திய அணி வெற்றி
Local
15 August 2026
காலி மைதானத்தில் தேசியக் கொடியேற்றிய இந்திய கிரிக்கெட் அணி
Local
15 August 2026
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார்!
Local
15 August 2026
இலங்கை – இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று
Local
15 August 2026
பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை: காவல்துறை அதிரடி உத்தரவு!
Local
15 August 2026
விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த நடிகை திரிஷா
Local
15 August 2026
வழமைக்குத் திரும்பியது ஹட்டன் - கொழும்பு பிரதான வீதிப் போக்குவரத்து
Local
15 August 2026