International14 August 2026

இலங்கை கடற்படையால் கைதான 9 தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய கடற்றொழிலாளர்களையும், அவர்களது படகையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிறைபிடிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes